Skip to main content

“அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்...” – ஏக்கத்தில் ரஜினி ரசிகர்கள்... போஸ்டர் பரபரப்பு

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

Rajni politics entry poster in vellore district

   

போர் வரும்போது நாங்கள் களத்தில் இருப்போம் என நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் குறித்து 2017ல் அறிவித்தார். அதன்பின் நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என இரண்டு பெரிய தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் எதிலும் ரஜினியின் மக்கள் மன்றம் கலந்துகொள்ளவில்லை. ரஜினி அறிவிப்புக்குப்பின் கட்சி தொடங்கிய நடிகர் கமல்கூட இரண்டு தேர்தல்களிலும், தனது மக்கள் நீதி மய்யத்தைப் போட்டியிடச் செய்து கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆனால், ரஜினி இன்னமும் அமைதியாகவே உள்ளார்.

 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக ரஜினி, நவம்பரில் கட்சி தொடங்குகிறார், டிசம்பரில் மதுரையில் மாநாடு நடத்துகிறார், களவேலையை தொடங்கச்சொல்லிவிட்டார், விரைவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தவுள்ளார் எனப் பரபரப்பு கிளம்பியுள்ளது. இப்படிப்பட்ட பரபரப்புகள், வதந்திகள் கடந்த 25 ஆண்டுகளில் பலமுறை நடந்துள்ளது.

 

இந்நிலையில் ரஜினியின் மக்கள் மன்றத்தினர் பெரும் கவலையில் உள்ளனர். அவர்கள், ரஜினி உடனே அரசியல் கட்சி தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவருகின்றனர். வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி பெயரில் மாவட்டம் முழுவதும் திடீரென சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டிகளில், ‘அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம், இப்ப இல்லன்னா எப்பவுமே இல்லை’ என்கிற வாசகம் அடங்கியதாக உள்ளது.


 

Rajni politics entry poster in vellore district

 

ஓராண்டுக்கு முன்பு ரஜினி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம், இப்ப இல்லன்னா எப்பவுமே இல்லை” என்றார். அதே வாசகத்தைக் குறிப்பிட்டு ரஜினி மக்கள் மன்றம் சுவரொட்டி ஒட்டியதைக் காணும்போது, இது மக்களுக்கானதாக தெரியவில்லை, ரஜினிக்குச் சொன்னதுபோல் உள்ளது. அதாவது நீங்க இப்போ அரசியலுக்கு வரலன்னா, அதன்பின் எப்போதும் வரமுடியாது எனச்சொல்வது போல் உள்ளது என்கிறார்கள் அரசியல் விவரம் அறிந்தவர்கள்.

 

இதுபற்றி ரஜினி ரசிகர்களிடம் பேசியபோது, தேர்தலுக்கு இன்னும் 6 மாதமே உள்ளது. இப்போதுகூட, ‘தலைவர் தனது அரசியல் முடிவைத் தெளிவாக அறிவிக்கமாட்டேன் என்கிறார். அணிகள் ஆரம்பித்து, பூத் கமிட்டி அமைக்கச் சொன்னார் தலைவர், அதனை செய்துகொண்டு இருந்தோம். அந்தப் பணி சில மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் 40 சதவீதம்கூட பூர்த்தியாகவில்லை. அதன் பின்னால் கரோனா வந்ததால் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. உங்களை முதலில் பார்த்துக்கொள்ளுங்கள் என தலைவரிடமிருந்து தகவல் வந்ததே தவிர, அதன்பின் எந்த தகவலும் அவரிடமிருந்து மன்றத்தினருக்கு வரவில்லை.

 

தற்போது கரோனா களத்திலிருந்து தேர்தல் களத்துக்கு அ.தி.மு.க, தி.மு.க உட்பட அனைத்து கட்சிகளும் திரும்பிவிட்டன. கூட்டணி, சீட் பங்கீடு எனக் கட்சிகள் அரசியல் செய்துகொண்டு இருக்கும் நிலையில், தலைவர் கட்சி பற்றியே பேசமாட்டேன் என்கிறார். இதுயெல்லாம் எங்களுக்கு வருத்தமாக உள்ளது. தேர்தலுக்குக் குறுகிய காலமே உள்ளதால் தலைவர் விரைந்து நல்லதாக ஒரு முடிவெடுக்க வேண்டும்’ என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.