ADVERTISEMENT

யார் அந்த கருப்பு ஆடு?  ரஜினியும் தேடும் நிர்வாகி!  

01:01 PM Sep 05, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

மக்கள் எழுச்சி வந்த பிறகே அரசியலுக்கு வருவார் என்றும், அந்த எழுச்சி இப்போதைக்கு ஏற்படப்போவதில்லை என்றும், அதனால் அவர் தேர்தல் அரசியலுக்கு வர மாட்டார் என்கிற ரீதியில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி ஒருவர் சொன்னதாக செய்திகள் பரவி வருகின்றன.

இந்த செய்தியறிந்து ரஜினி புன்னகைத்திருக்கிறார். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என உயர்மட்ட நிர்வாகிகள் முதல் கடைகோடி ரசிகன் வரை வலியுறுத்தி வரும் நிலையில், அரசியலுக்கு ரஜினி வர மாட்டார் என எப்படி ரஜினி மன்ற நிர்வாகிகள் சொல்வார்கள் என்பதால் ஏற்பட்ட புன்னகை அது என்கிறார்கள் ரஜினி மக்கள் மன்றத்தினர்.

மேலும், இது குறித்து ரஜினியின் குடும்பத்தினருக்கு நெருக்கமான தொடர்புகளில் விசாரித்தபோது, "இப்படிப்பட்ட பொய்யான தகவல்களை யார் பரப்புகிறார்கள், ரஜினியின் மக்கள் மன்றத்தில் அப்படிப்பட்ட கருப்பு ஆடு யார் என ரஜினி விசாரித்துக் கொண்டிருக்கிறார்" என்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT