Skip to main content

ரஜினி அட்டாக்கிற்கு  திமுக மௌனம் ஏன்? 

Published on 20/03/2020 | Edited on 20/03/2020

 

ரஜினி அரசியலுக்கு வருவது பற்றிய தனது நிலைப்பாட்டை சமீபத்தில் தெரிவித்திருந்தார். கட்சித் தலைமைக்கு ஒருவர்; ஆட்சித் தலைமைக்கு ஒருவர், தேர்தலுக்குப் பிறகு தேவையற்ற கட்சிப் பதவிகள் கலைக்கப்படும், மக்களிடம் ஒரு புரட்சி அலை உருவாக வேண்டும் என 3 திட்டங்களை முன்னிறுத்திய ரஜினி, ’’தமிழகத்தில் அரசியல் மாற்றமும் ஆட்சி மாற்றமும் இப்போதைக்கு இல்லைன்னா எப்போதுமே இல்லை ’’ என்பதை மையப்படுத்தியிருந்தார். 

 

Rajini



       

ரஜினியின் இந்த தத்துவம், தமிழக அரசியலில் நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கின. அவரது பேச்சினை மக்களிடம் கொண்டு செல்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர் ரஜினி மக்கள் மன்றத்தினர். இந்த நிலையில், கடந்த வாரம் தனியார் இணையத்தளத்தின் ஆண்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட ரஜினி, மக்களிடம் புரட்சி அலை எப்படி உருவாகும் என்பதை சுட்டிக்காட்டினார். 
 

அதாவது, ’’ கணக்குக் கேட்டதற்காக திமுகவில் இருந்து எம்.ஜி.ஆரை வெளியேற்றினார்கள். உடனே எம்ஜிஆர்., கணக்கு கேட்டது தப்பா? என மக்களிடம் நியாயம் கேட்டார். அப்போது எம்.ஜி.ஆருக்கு அனுதாப அலை உருவானது. எம்.ஜி.ஆர். முதல்வரானார். அதேபோல, 1991-ல் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்டபோது திமுகவுக்கு எதிரான அலை உருவானது. முதல்வரானார் ஜெயலலிதா. இப்படித்தான் மக்களிடம் புரட்சி உருவாகுது‘’ என விவரித்த ரஜினி, ’’ தன்னுடைய பேச்சு ஒரு அலையாக மாறி தற்போது சுழலாக உருமாறியிருக்கிறது. அது சுனாமியாக மாறும் ‘’ என்றார். 


        

தனது அரசியல் நிலைப்பாடு குறித்த முந்தைய கருத்துக்களுக்கான பொருள் விளக்கம் தருவது போல ரஜினியின் பேச்சு இருந்தாலும், முழுக்க முழுக்க அரசியல் ரீதியாக திமுகவை தாக்குவதே முதன்மையாக இருந்தது. திமுகவை தாக்கிப் பேசிய ரஜினியின் கருத்துகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என திமுக இளைஞர் அணியும் திமுகவின் ஐ.டி.விங்கும் கொந்தளித்தனர். 
             

தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்ட சூழலை விளக்கி ரஜினியின் பேச்சுக்கு மறுப்புத் தெரிவிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினிடம் மூத்த தலைவர்கள் சிலர் வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆனால், இது குறித்து ரஜினியின் பேச்சை கண்டித்து திமுக தரப்பில் எந்த அறிக்கையும் வரவில்லை; இரண்டாம் நிலை தலைவர்களின் விமர்சனங்களும் வரவில்லை. ஆழ்ந்த மௌனமே அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. 
        

திமுகவின் இந்த மௌனத்திற்கு என்ன காரணம் என விசாரித்தபோது, ‘’ரஜினியின் பேச்சை கண்டித்து அறிக்கை வெளியிட வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்திய போது கட்சி தலைமை அதனை ஏற்றுக்கொண்டது. ஆனால், திமுகவின் அரசியல் ஆலோசகராக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் பிரசாந்த் கிஷோர், ரஜினியின் பேச்சுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என கேட்டுக்கொண்டதால் தவிர்க்கப்பட்டிருக்கிறது‘’ என்கிறார்கள் அறிவாலய நிர்வாகிகள். 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.