Advertisment

அரசியல் பேசும் ரஜினி மக்களுக்கு எந்த நன்மையும் செய்வது கிடையாது -மன்சூர்அலிகான் தாக்கு

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சுற்றி வித்தியாசமான முறையில் பிரசரம் செய்து வருகிறார். இதனால் திமுக, பாமக வேட்பாளர்களுக்கு இணையாக இவரது பிரச்சாரமும் தொகுதி முழுவதும் கவனிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆத்தூர், பஞ்சம்பட்டி, ஆரியநல்லூர், சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று மன்சூர்அலிகான் பிரசாரம் மேற்கொண்டார்.

Advertisment

mansoor ali khan

அப்போது பொதுமக்களிடையே பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய பிரச்சினையாக உள்ளது குடிநீர் பிரச்சனை. எனவே என்னை தேர்ந்தெடுத்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பேன். மற்ற கூட்டணிகள் எல்லாம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு சேர்ந்துள்ளனர். ஆனால் நான் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவன். உங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய நடவடிக்கை எடுப்பேன்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

நடிகர் ரஜினிகாந்த் திடீரென அரசியல் பேசுவார். புதிய பட அறிவிப்பு வரும் போது மட்டுமே நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசுகிறார். அதன் பின்னர் அமைதியாகி விடுகிறார். மற்றொரு புதிய படம் வெளியாகும் போது அறிக்கை வெளியிடுவார். ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்வது கிடையாது. இவ்வாறு பேசினார்.

actor dindugal loksabha election2019 Mansoor Ali Khan Naam Tamilar Katchi rajinikanth
இதையும் படியுங்கள்
Subscribe