Skip to main content

25 ஆண்டுகால எதிர்பார்ப்பு, 25 நாளில் பூர்த்தியாகப்போகிறதா??? ரஜினியின் அரசியல் அறிவிப்பு!!!

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

கிட்டதட்ட 25 ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வருவாரா, வருவாரா என எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். அவரும் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகவிருக்கும் நேரத்தில், விரைவில் வருவேன், இன்னும் நாள் வரவில்லை என்று கூறியவண்ணமே இருந்தார்.
 

rajinikanth


தற்போது அவரது அண்ணனும் அரசியல் வருகை குறித்து தீர்க்கமாக பேசிவருகிறார், ரஜினி அதற்கு எந்த தடையும் போடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக, அரசியல் வருகை முயற்சி வலுபெற்றிருக்கிறது. இதற்கு ஒரு காரணம் கமலின் அரசியல் வருகை. 
 

கமல்ஹாசன் கடந்த 2018 பிப்ரவரி 21ம் தேதி மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியைத் தொடங்கினார். கட்சியைத் தொடங்கிய ஒன்றரை வருடங்களிலேயே தேர்தலில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் நிற்கின்றனர். இந்தத் தேர்தல் கணிசமான வாக்குகள் மக்கள் நீதி மய்யத்திற்கு வந்துள்ளதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன. மக்கள் நீதி மய்யத்திற்கு பதிவான ஓட்டுகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம், ரஜினி இல்லையென்பதால்தான் கமலுக்கு ஓட்டு எனவும் கூறிவருகின்றனர். 
 

ரஜினியும், கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கு எத்தனை சதவீதம் வாக்குவங்கி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு அரசியல் முடிவை அறிவிப்பார் என்றும், ஒருவேளை நல்ல சதவீதமாக இருந்தால் உடனே அமைய வாய்ப்பிருக்கிறது என்றும் நெருங்கிய வட்டாரத்தினர் கூறிவருகின்றனர். மேலும் தற்போது இருபெரும் அரசியல் தலைவர்களும் இல்லையென்பதால் தைரியமாக முடிவெடுக்கலாம் என்றும் அவரிடம் கூறி வருகின்றனர். 
 

இது வெறும் பட புரமோஷனாக கடந்துபோகுமா இல்லை, 25 வருட வினாவிற்கு விடையாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.