Skip to main content

“ராகுல்காந்தி தவறி விழுந்திருப்பார்; தள்ளிவிட்டதாக சித்தரித்துவிட்டனர்” -அரசியல் லாபம் தேடுவதாக காங்கிரஸ் மீது கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கு!

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

Rajenthirabalaji speech about rahul gandhi's uttarpradhesh march

 

 

ஸ்ரீவில்லிபுத்தூரில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

“மு.க.ஸ்டாலின் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்துவார்; கடையைத் திறப்பார். திமுக ஆட்சியில் நடந்த அக்கிரமம், விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை ஸ்டாலின் திரும்பிப் பார்க்கவேண்டும். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆன பின்பு விவசாயிகளுக்கு நன்மை செய்யப்பட்டுள்ளது. குடிமராமத்து மூலம் அனைத்து குளங்களும் தூர்வாரப்பட்டு நீர் சேகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிரம்பிக் கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சியின் காரணமாக தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் உள்ளது. ஏழை விவசாயிகளுக்கு,  பாட்டாளிகள்,  படைப்பாளிகளுக்கு அனைத்து திட்டத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமி.  முதல்வர்  எடப்பாடி பழனிசாமியின் புகழை கெடுப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி எடுத்து வருகிறார். அவருடைய முயற்சி ஒருகாலும் பலிக்காது. அவரது முயற்சி காணல் நீராகத்தான் போகும். எடப்பாடி பழனிசாமி ஆட்சி தெளிவான ஆட்சி, வலுவான ஆட்சி, வல்லமையான ஆட்சி,  பொலிவான ஆட்சி, சிறப்பான ஆட்சி என்று மக்களால் போற்றப்படும் ஆட்சி. இந்த ஆட்சி, எந்தவிதமான வில்லங்கமும் இல்லாமல் தொடர்ந்து நடைபெறும். 

 

உத்தரபிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் அந்த குற்றவாளியைச் சுடவேண்டும். உத்தரபிரதேசத்தில் சிறுமி உயிரிழந்தது தொடர்பாக,  காவல்துறை விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இந்த நேரத்தில் ராகுல் காந்தி அங்கு சென்று வம்பு இழுக்கக்கூடாது. காவல்துறையினர் ராகுல் காந்தியை தடுத்து  இருப்பார்கள்;  தள்ளிவிட வாய்ப்பில்லை.  அவர்  தவறி விழுந்திருக்கலாம். பெருந்தன்மைக்கு சொந்தக்காரர் நரேந்திர மோடி. அவரும் உத்தரப்பிரதேச முதல்வரும்,  ராகுல் காந்தியை தள்ளி விடுவது போன்ற ஈனத்தனமான செயலை செய்திருக்க மாட்டார்கள். நடந்த சம்பவம் சித்தரிக்கப்பட்டதாகவே தெரிகிறது. உண்மைக்கு புறம்பான சம்பவமாகவும் தெரிகிறது. இதை வைத்து ஈனத்தனமான அரசியல் நடத்தி லாபம்  தேடும் காங்கிரஸ் கட்சியின் நினைப்பானது,  பிழைப்பை கெடுக்கும்.

 

வரும் 6-ஆம்  தேதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  அதிமுக தலைமை அவசர அழைப்பு ஒன்றும் விடுக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பணி இருக்கிறது என்று கூறினால் கூட்டத்திற்கு செல்லாமல்  இருந்து கொள்ளலாம். அதிமுகவை சுற்றி என்னதான் மாவாட்ட நினைத்தாலும் ஒன்றும் நடக்காது. அதிமுக என்பது கடல்போல் பொங்கத்தான் செய்யும்.  கடைசியில் அமைதியாகிவிடும். 

 

துணை முதல்வரைப் புறக்கணிக்கவில்லை பணியின் காரணமாக அரசு விழாக்களில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். அதிமுக மிகப்பெரிய ஆலமரம். அதில் விழுதுகள் பல இருக்கும் அதில் எந்த விழுது பெரியது, எந்த விழுது சிறியது? எனப் பார்க்க முடியாது.  அனைத்துமே பெரிய விழுதுதான் அனைத்துமே உறுதியானவைதான். அதிமுகவை விட்டு யாரும் எங்கும் செல்ல மாட்டார்கள். இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். ஸ்டாலின் எண்ணங்களைத் தவிடு பொடியாக்கி, வெற்றி இலக்கை நோக்கி அதிமுக செல்கிறது. அதிமுக வாழும்; நிச்சயம் தமிழகத்தை தொடர்ந்து ஆளும்”  என்று பேட்டியளித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.