Skip to main content

''வரவேண்டிய நேரத்தில் வருவார் ராஜேந்திரபாலாஜி'' -டயலாக் விடும் முன்னாள் எம்.எல்.ஏ.!

Published on 30/12/2021 | Edited on 30/12/2021

 

'Rajendrapalaji will come in due time' '- Former MLA

 

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகி, விருதுநகர் மாவட்ட காவல்துறை 8 தனிப்படை அமைத்து தேடிவரும் நிலையில், அவரோடு தொடர்பிலிருந்த கட்சி நிர்வாகிகள், அவ்வப்போது விசாரணைக்கு ஆளாகிவருகின்றனர். அவர்களது கைபேசிகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

 

அழைத்தால் செல்வதும், சிலமணிநேர விசாரணையில் காவல்துறை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதுமாக இருந்த விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், இதனை ஒரு தொந்தரவாகவே கருதி வருகின்றனர். இனிமேல் விசாரணைக்கு அழைக்கப்பட்டு பதில் சொல்லிவிட்டு திரும்பும்போது, வழக்கம்போல் அமைதியாக இருந்துவிடாமல்,  மீடியாக்களைச் சந்தித்து பேட்டியளித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

 

இன்று (30-ஆம் தேதி) சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனும், ராஜேந்திரபாலாஜியின் உதவியாளர் சீனிவாசனும், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆளானபோது, சற்று ரிலாக்ஸாக இருந்த நிலையில் நம்மைத் தொடர்புகொண்டு ‘நாட்டுக்கோழி சாப்பாடு வாங்கித் தருவாங்களான்னு தெரியல..’ என்று ஜோக்கடித்தார்.  

 

அடுத்து, விசாரணை முடித்துவிட்டு திரும்பியபோது, செய்தியாளர்களிடம் ராஜவர்மன் “மூன்று மணி நேரமாக சவுத் ஜோன் டிஜஜி மேடமும், எஸ்.பி.மனோகர் சாரும் விசாரித்தார்கள். ராஜேந்திரபாலாஜியும் நீங்களும் நெருக்கமாக இருந்தீர்கள். அவருக்கும் உங்களுக்கும் தொடர்பு எப்படி இருக்கிறது? அவர் எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்றெல்லாம் விசாரித்தார்கள். ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு ராஜேந்திரபாலாஜி 17-ஆம் தேதி சென்றபிறகு, எங்கள் யாரிடத்திலும் அவர் தொடர்புகொள்ளவில்லை, நாங்களும் தொடர்புகொள்ளவில்லை. கழக நிர்வாகிகளும்கூட தொடர்புகொள்ளவில்லை. நாங்களும்தான் அவரைத் தேடிக்கொண்டிருக்கிறோம். எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடித்துத் தரும்படி நாங்களும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். ராஜேந்திரபாலாஜி மீது பொய் வழக்கு போடப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டு, தான் நிரபராதி என்பதை நிரூபிப்பார் என்பதைச் சொல்லிவிட்டு வந்திருக்கிறோம். மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்துகொண்டு, விசாரணைக்கு பயந்து ஓடி ஒளிய என்னால் முடியாது. அண்ணனுடைய (ராஜேந்திரபாலாஜி) சூழ்நிலை அப்படி. உடல்நலம் இல்லாதவர். அதனால், முன்ஜாமீன் வாங்குவதற்கு முயற்சிக்கிறார். இது என்ன கொலை வழக்கா? அல்லது, வேறு எதுவும் கொடூர வழக்கா?  ஏதோ அவர் மேல வழக்கு போட்டிருக்காங்க. நீதிமன்றத்தில் போராடி கண்டிப்பாக வெற்றி பெறுவார்.  ராஜேந்திரபாலாஜி வரவேண்டிய நேரத்தில் வருவார். கண்டிப்பாக அதில் எந்தவித மாற்றமும் இல்லை.” என்றார்.

 

ராஜேந்திரபாலாஜி வழக்கு குறித்து முதல்முறையாக  வாய் திறந்திருக்கிறார்கள், விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயபிரபாகரனுக்கு சாலியர் மகாஜன சங்கம் ஆதரவு! - ராஜேந்திரபாலாஜி வீட்டில் நிர்வாகிகள் சந்திப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Saliyar Mahajana Sangam support for Vijaya Prabhakaran

நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சமுதாய ரீதியிலான வாக்குகளைப் பெறுவதில் அரசியல் கட்சியினரும், போட்டியிடும்  வேட்பாளர்களும் முனைப்பு காட்டிவருகின்றனர். அதற்காக, சமுதாயப்  பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுகின்றனர்.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுவரும் சாலியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் கணிசமாக உள்ளன. குறிப்பாக, அருப்புக்கோட்டையிலும் சாத்தூரிலும் சாலியர்கள் அதிகமாக  வசிக்கின்றனர். இந்நிலையில், சாலியர் மகாஜன சங்கமும், நெசவாளர் முன்னேற்றக் கழகமும், இத்தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.  

சாலியர் மகாஜன சங்கத்தின் மாநிலத் தலைவரான ஏ.கணேசன் தலைமையில், அந்த அமைப்பின் நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை திருத்தங்கல்லில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்தபோது, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனும் உடனிருந்தார்.  தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்தும், எந்தெந்தப் பகுதிகளில் களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது  குறித்தும் அப்போது ஆலோசனை நடத்தினார்கள்.  

Next Story

“விஜயபிரபாகரன் பெயரிலேயே பெரிய ராசி இருக்கிறது” - ராஜேந்திரபாலாஜி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
"Vijay Prabhakaran has a great sign in his name" - Rajendra Balaji

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் அறிமுகக் கூட்டம் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமை தாங்கினார். தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன், தனது வெற்றிக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வாக்கு சேகரித்துப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி. ராஜேந்திர பாலாஜி பேசுகையில், “இந்தத் தொகுதிக்குள் தான் எய்ம்ஸ் மருத்துவமனை, காமராஜர் பல்கலைகழகம், ஏர்போர்ட் எல்லாமே வருகிறது. எனவே  இவை நமக்குத்தான் சொந்தம். மொத்தத்தில் தென்மாவட்ட மக்களின் கெப்பாசிட்டி தம்பி விஜய பிரபாகரன் கையில் உள்ளது. இவர் வெற்றிபெற்று எம்.பி. ஆவதை இனி யாராலும் தடுக்க முடியாது. தமிழர்களின் உரிமைக்காகவும் பெருமைக்காகவும் உழைக்கின்ற கட்சி அ.தி.மு.க.

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி ராசியான கூட்டணி. தற்பொழுது உள்ள எஸ்.டி.பி.ஐ. இஸ்ஸாமிய அமைப்புகளில் மிகவும் வலிமையானது. அந்த அமைப்பு நமக்கு வலுவான துணையாக நிற்கிறது. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என மதம் பார்க்காமல் அனைவருக்கும் உழைத்த கட்சி அ.தி.மு.க. எங்களை இனத்தை, சொல்லி மதத்தைச் சொல்லி பிரிக்க முடியாது. சிவகாசியில் பேசிய இ.பி.எஸ். ஓங்கிய குரலில் கொட்டும் முரசுக்கு ஓட்டு கேட்டு முழங்கினார். அது டெல்லி வரைக்கும் ஒலித்திருக்கிறது. கூட்டணிக் கட்சிக்கு மரியாதை கொடுத்து அங்கீகரிக்கக் கூடிய கட்சி அ.தி.மு.க.. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழுக்காகப் பெருமை சேர்த்தவர். நாங்கள் தற்போது கூட்டணியில் இல்லாவிட்டாலும், அவர் அ.தி.மு.க. கூட்டணியில்தான் முதன் முதலில் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"Vijay Prabhakaran has a great sign in his name" - Rajendra Balaji

கூட்டணி என்றாலே முதலில் அமர்ந்து பேசிவிட வேண்டும். தொகுதிகள் சின்னம் ஆகியவற்றைச் சரியாக முடிவு செய்யவேண்டும். தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் பெயரில் பெரிய ராசி இருக்கிறது, வசியம் இருக்கிறது. அது எனக்கு நன்றாகத் தெரியும் அவர் வெற்றி நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அவர் ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தார் என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். நாளை முதல் தொகுதியில் 100 இடங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் தேர்தலில் பிரச்சாரமே வேண்டாம் என்று ஒரு அணியும், ஓட்டு போட்டால் போடுங்கள் இல்லாவிட்டால் போங்க என்று ஒரு அணியும் சுற்றித் திரிகிறது. விஜயபிரபாகரன் வெற்றிக்கு அ.தி.மு.க. கூட்டணி கடுமையாக இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். கூட்டணிக்  கட்சித் தலைவர்கள், அவருடைய வெற்றிக்குப் பாலமாக இருக்கவேண்டும். உங்களுக்குத் தேவையானவற்றை அ.தி.மு.க. இயக்கம் செய்யும். அதற்கு நான் முழு பொறுப்பு. தம்பி விஜய பிரபாகரன் பொறுப்பு. அதிமுக அடுத்து ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.” என்றார்.