Skip to main content

ராஜஸ்தான், ம.பி. தேர்தல் முடிவை தீர்மானிக்கும் பூண்டு விவசாயிகள் 

Published on 04/11/2018 | Edited on 04/11/2018
m


2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 11 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த  தேர்தலில் வெற்றி தோல்வியை இரண்டு மாநில விவசாயிகள் தீர்மானிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அதற்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பூண்டு முக்கிய காரணமாக இருக்கப் போகிறது!

 
இந்தியாவில் 45 சதவீதமான பூண்டு உற்பத்தி என்பது மத்திய பிரதேச மாநிலம் மால்வா, ராஜேஸ்தான் மாநிலம் ஹடோடி ஆகிய பகுதிகளில் முக்கிய பணப்பயிராக இருந்து வருகிறது. 2016 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒரு கிலோ பூண்டு ரூபாய் 100 அளவிற்கு விற்பனை ஆகி இருக்கிறது. அதே பகுதியில் நல்ல தரமான பூண்டு ரூபாய் 130 அளவிற்கும்,  ஒரு குவிண்டால் 13ஆயிரம் ரூபாய் அளவிற்கு விற்பனைக்கு எடுத்து கொல்லபட்டு இருக்கிறது.

 

2016 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் மொத்தமாக இந்த நிலைமாறி இருக்கிறது. 2017 மார்ச் மாதம் அறுவடை முடிந்து சந்தைக்கு வரவே விவசாயிகள் நினைத்ததற்கு நேர்மாறாக கடுமையாக விலை சரிந்துள்ளது. 2016 காலகட்டதில் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் 2017 மார்ச் மாதம் 40 ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது. அதன் பின்னர் கடந்த ஜூன் மாதம் கிலோ 30 ரூபாய்க்கு குறைந்தது. அதன் பின்னர் படிப்படியாக குறைந்து கிலோ 1 ரூபாய்க்கு வீழ்ச்சி அடைந்து இருக்கிறது.   இது விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த மோசமான நிலையின் காரணமாக 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். ஆனால் வெளியில் தெரியாமல் இருக்க விவசாயிகள் மிரட்டப்படுகிறார்கள்.   இந்த ஆண்டு அதிக அளவில் விவசாயிகள் இறந்திருக்கிறார்கள்.  இந்த விவகாரம் நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும் என்கிறார்கள். அதே போல இந்த பிரச்சனையை கையில் எடுத்து இருக்கும் எதிர்க்கட்சிகள்  வெற்றி பெற்றால் இதற்கான தீர்வை கொண்டு வருவோம் என்று வாக்குறுதியை அளித்து வருகிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Tragedy of the child who fell into the borehole

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தேர்தல் தேதியில் மாற்றம்; வேட்பாளர் உயிரிழப்பால் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Change in Election Date due to candidate's incident happened in madhya pradesh

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல், வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, திமுக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 29 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 மற்றும் மே 13 என நான்கு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. மத்திய பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் பிடல் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தலின் போது நடைபெற இருந்தது. அந்த தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வகையில், பிடல் தொகுதி வேட்பாளராக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அசோக் பலவி வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

Change in Election Date due to candidate's incident happened in madhya pradesh

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக் பலவி நேற்று முன் தினம் (09-04-24) மாரடைப்பு காரணமாக திடீரென்று உயிரிழந்துவிட்டார். இதனால், ஏப்ரல் 26ஆம் தேதி அன்று பிடல் தொகுதியில் நடைபெறவிருந்த தேர்தல் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது, ‘தேர்தலின் போது அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சியின் வேட்பாளர் உயிரிழக்கும் வகையில், அந்தத் தொகுதிக்கு வேறு புதிய வேட்பாளரை அக்கட்சி அறிவிக்க அவகாசம் கொடுக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 52ன்படி சம்பந்தப்பட்ட தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்படும். அந்த வகையில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக் பலவி கடந்த 9ஆம் தேதி உயிரிழந்த நிலையில், பிடல் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும், இந்தத் தொகுதிக்கான வாக்கு பதிவானது, மூன்றாம் கட்ட தேர்தலின் போது மே 7ஆம் தேதி நடைபெறும்’ என்று அறிவித்துள்ளது.