சிவகங்கையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சரான ராஜகண்ணப்பனை, காங்கிரஸ் கட்சியின் கார்த்திக் சிதம்பரம் மற்றும் மானாமதுரை திமுக வேட்பாளர் ஆகியோர் சந்தித்து ஆதரவு கோரினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜகண்ணப்பன், இந்த பாராளுமன்றத் தொகுதியை பொறுத்தவரையில் தம்பி கார்த்திக் சிதம்பரம் அவர்களையும், மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் இலக்கியதாசன் அவர்களையும் நாங்கள் ஆதரிப்போம் என்று முடிவு செய்து களப்பணியாற்ற இருக்கிறோம். வரும் 25ஆம் தேதி முதல் திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்கிறோம். வரும் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வி அடையும். அதிமுகவில் ஜனநாயகம் இல்லை என்றார்.