Skip to main content

“சட்ட ஒழுங்கு பிரச்சனைய ஏற்படுத்தவே இந்த ரெயிடு..” - ஆர்.எஸ். பாரதி 

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

"This raid is to create law and order problem.." - R.S. Bharti

 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர், “ராமர் பெயரை பயன்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடித்ததுபோல், அனுமன் பெயரை பயன்படுத்தி கர்நாடகாவில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நாடகம் ஆடினார்கள். அனுமன் கர்நாடகாவில் பிறந்தார் எனச் சொல்லி அங்கு அரசியல் நடத்தினார்கள். வாட்ஸ் அப், ஊடகங்களில் எல்லாம் பார்த்திருப்பீர்கள்... ஒரு கவரின் ஐந்து இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து அதன் மேல் தாமரை சின்னத்தை வைத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர். ரூ. 2000 நோட்டு 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு அவ்வளவாக புழகத்தில் இல்லை. இது தொடர்பாக என் மீது வழக்கு போட்டாலும் கூட அவர்கள் கொடுத்த பணத்திற்கான ஆதாரங்கள் இருக்கிறது அதனை நிரூபிக்க நானும் காங்கிரஸ் கட்சியினரும் தயாராக இருக்கிறோம். இத்தனை நாடகங்களுக்கு பிறகும் மிகப் பெரிய வெற்றியை கர்நாடகா மக்கள் காங்கிரஸுக்கு அளித்துள்ளனர். 

 

கர்நாடகாவில் முதல் விக்கெட் விழுந்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பைனல் மேட்சில் மேன் ஆஃப் தி மேட்சாக எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என நான் ஏற்கனவே பேசியுள்ளேன். தேர்தலின் முடிவு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2000 ரூபாய் நோட்டு விவகாரம் கூட கர்நாடகா தேர்தல் முடிவு காரணமாக இருக்கக்கூடுமோ என சில அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது நம்பத்தக்கதாகவும் இருக்கிறது. அண்ணாமலை கர்நாடகாவில் தோல்வியை சந்தித்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்ததும் அவரை அடையாளம் காட்டிக்கொள்ள ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில், ‘பாஜக மற்றும் அதன் அதிகாரம் குறித்து இன்னும் 10 நாட்களில் செந்தில் பாலாஜி தெரிந்து கொள்வார்’ எனப் பேசினார்.

 

இது மட்டுமல்ல 2022 ஆகஸ்ட் மாதத்தில், ‘அமலாக்கத்துறை தற்போது பிசியாக உள்ளது. அந்த பிஸியை எல்லாம் முடித்துவிட்டு செந்தில் பாலாஜிக்கு ரெயிடு வருவார்கள்’ என பகிரங்கமாக சொன்னார். செந்தில் பாலாஜியை குறி வைக்க காரணம், கோவை மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக கூட்டணி கனிசமான இடங்களைப் பெற்றது. ஆனால், தேர்தல் முடிந்து இந்தப் பகுதிகளுக்கு செந்தில் பாலாஜி பொறுப்பேற்ற பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 100க்கு 100 திமுக வெற்றி பெற்றது. ஆகவே அவரை முடக்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட காரியங்களில் அண்ணாமலை திட்டமிட்டு செய்திருக்கிறார் என்பதற்கு அவரின் முந்தைய பேச்சுக்களே உதாரணமாக காட்ட முடியும். முதலமைச்சர் இங்கு இல்லாதபோது இப்படியான காரியங்களை செய்வது பாஜகவின் கேவலமான அரசியலை காட்டுகிறது.

 

எங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 23 ஆம் தேதி சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்று உலக முதலீட்டாளர்களின் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு இழுக்கச் சென்றிருக்கிறார். அதன்படி அவர் தினமும் முதலிட்டாளர்களைச் சந்தித்து இங்கு கொண்டுவரும் முதலீடுகளை குறித்த செய்திகள் தேசிய பத்திரிகைகளில் எல்லாம் வந்துகொண்டிருக்கிறது. எனவே இதனை திசை திருப்ப என்ன முயற்சி எனும் வஞ்சக எண்ணத்தோடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரில் இல்லாத நேரத்தில் பாஜக அரசு இன்று ரெயிடு நடத்தியிருக்கிறார்கள். திமுக எந்த காலத்திலும், ரெயிடுகளுக்கு பயந்ததில்லை. 1976 அவசர காலகட்டத்திலேயே ரெயிடு என்றால் என்னவென்றே தெரியாதபோதே ரெயிடுகளை எதிர்கொண்டு முறியடித்து வெற்றி பெற்ற இயக்கம் திமுக. 

 

ஒரு ரெயிடு நடக்கிறது என்றால், மாநில காவல்துறையிடம் தெரிவித்து, உள்ளூர் காவல்துறையினரின் உதவியுடன் ரெயிடுக்கு செல்வதுதான் வழக்கம். ஆனால் இன்று எந்த தகவலும் வரவில்லை என மாவட்ட எஸ்.பி.யே சொல்கிறார். இதில் சந்தேகம் எழுகிறது. எந்தவித அடையாளமும் இல்லாமல் விடியற்காலை மூன்று மணிக்கு வந்திருக்கிறார்கள். அதனால், அங்கிருந்தவர்கள் அவர்கள் யாரெனத் தெரியாமல் தற்காப்புக்காக வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கியிருக்கலாம். ஆனால், எனக்கு விவரம் வந்தவுடனேயே செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு திமுகவினர் யாரும் அங்கிருக்கக் கூடாது என்று சொன்னேன். அவரும் உடனடியாக அங்கிருந்து அவர்களை கலைந்துபோக செய்திருக்கிறார். 

 

இதில் இருந்து என்ன தெரிகிறது. ஐ.டி. அதிகாரிகளை அடித்தார்கள் என செய்தியாக்கி திட்டமிட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என பொதுமக்கள் கூட சொல்லும் அளவுக்கு இந்த சோதனை நடந்துள்ளது. கடந்த ஆட்சியில் விஜய பாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தபோது எவ்வளவு கலவரங்கள் நடந்தன. ஆனால், அன்றைக்கு ஆட்சியில் இருந்தவர்கள் நடவடிக்கை எடுத்தார்களா” என்று தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.