Skip to main content

“ராகுல் பலத்தைக் காட்டிவிட்டார்; இனி எல்லாம் திமுக கையில்..!” - கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி!

Published on 03/03/2021 | Edited on 03/03/2021

 

Rahul has shown his strength  now everything is in the hands of DMK says KS Alagiri


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக, தேர்தல் கூட்டணி குறித்தான பேச்சு வேகம் எடுக்க ஆரம்பித்தது. அதிமுக ஒருபுறம் பா.ஜ.க., தே.மு.தி.க. உடனும், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடனும் கூட்டணிப் பேச்சு வார்த்தையை நடத்திவருகிறது. தொகுதிப் பங்கீட்டில் இன்னும் சமரசம் ஏற்படாததால், திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.

 

இந்நிலையில், இன்று காலை கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, “கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் நல்ல முறையில் சென்றுகொண்டிருக்கின்றது. இடங்கள் ஒதுக்குவது தொடர்பாக திமுக நல்ல முடிவு எடுக்கும். கடந்த 15ஆண்டுகாலமாக இந்தியாவில் கொள்கை ரீதியாக திமுகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்துள்ளது சிறப்பிற்குரியதாகும். வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதி. 

 

காங்கிரஸின் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக மக்கள் பெரும் வரவேற்பு அளித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். மத்தியில் மோடி ஆட்சியும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியும் அகற்றப்படுவது உறுதி. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இனி திமுகதான் முடிவுசெய்ய வேண்டும். பந்து அவர்கள் கையில்தான் உள்ளது. காங்கிரஸுக்கென ஒரு பலம் உள்ளது. அந்தப் பலம் என்ன என்பது ராகுல், தமிழகம் வந்தபோது தெரிந்தது. பத்து பைசாகூட செலவில்லாமல் கூட்டம் கூடுகிறது. தமிழகத்தில் சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும். வன்னியர் உள் ஒதுக்கீடு என்பது மக்கள் மன்றத்தில் பேசி விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட வேண்டிய விஷயம். 

 

காங்கிரஸ் உட்பட எல்லாக் கட்சிகளிலும் ஊடுருவி, பாஜக தங்கள் சர்வாதிகாரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி அந்த முயற்சியைத் தகர்த்தெறியும். தமிழக சட்டமன்றத் தேர்தலில் 'வளர்ச்சி' என்ற முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்வோம். பாஜக, ஆர்.எஸ்.எஸ். நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். அதற்கு காங்கிரஸ் இடம் கொடுக்காது” எனத் தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.