Skip to main content

விழித்துக்கொண்ட ராகுல்!!! தைரியம் கொடுத்த...

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

 

ஐந்து கட்ட, ஆறு கட்ட தேர்தல் முடிந்தவுடன் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளது என சில ஏஜென்சிகள் காங்கிரஸ் கட்சியிடம் அறிக்கை கொடுத்துள்ளது. இதேபோல்தான் பாஜகவுக்கும் சில ஏஜென்சிகள் மற்றும் உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது. அதில் இரு கூட்டணியிலும் இல்லாத மாநில கட்சிகளை ஒருங்கிணைத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Rahul_Gandhi



இந்தநிலையில்தான் 7வது கட்ட தேர்தல் முடிந்த உடனேயே எக்ஸிட் போல் கருத்து கணிப்பு வெளியாகி இந்தியா முழுக்க அதைப்பற்றிய விவாதங்கள் நடந்து வந்தன. இந்த எக்ஸிட் போல் கருத்து கணிப்பால் பாஜக தரப்பு கொண்டாட்டமாகவும், காங்கிரஸ் தரப்பு அதிர்ச்சியடைந்தனர். மீடியாக்களிடம் தொடர்பு வைத்திருக்கும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் மட்டுமே இந்த கருத்து கணிப்பு தவறானது என்று சொல்லி வந்தார்கள். 5ம் கட்ட மற்றும் 6ம் கட்ட தேர்தலின் முடிவை தெரிந்துகொண்ட பாஜகதான் எக்ஸிட் போல் கருத்து கணிப்பை வெளியிட வைத்தது என்று சிலர் எதிராக கருத்து தெரிவித்தனர்.

 

எக்ஸிட் போல் கருத்து கணிப்பால் சோர்வடையாத சந்திரபாபு நாயுடு தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். அப்போது வாக்கு எண்ணிக்கையில் நம்பகத்தன்மை வேண்டும், ஒப்புகைச் சீட்டு விசயத்தில் எந்த குளறுபடியும் வரக்கூடாது. எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகம் வராதப்படி வாக்கு எண்ணிக்கை நடக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளனர். அதில் சில கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது. 


 

 

இதேபோல் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் காங்கிரஸ் தலைமையை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது கட்சி போட்டியிட்ட இடங்களைவிட கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தேனி (காங்கிரஸ்), கரூர் (காங்கிரஸ்), ராமநாதபுரம், கோவை ஆகிய இடங்களில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக திமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். 
 

ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டவர்கள் எடுக்கும் முயற்சிகள் காங்கிரஸ் தலைமைக்கு புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறதாம். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, அகமதுபடேல், குலாம்நபி ஆசாத், கமல்நாத் உள்ளிட்டவர்களுடன் சோனியாகாந்தி விவாதித்துள்ளார். 


 

 

இதில் எந்த ஒரு கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் என்ன செய்வது, அதனை எதிர்கொள்வது எப்படி. அந்த நேரத்தில் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரினால் என்ன செய்வது, அதனை தடுப்பத எப்படி. காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கான வழி என்ன. எந்த ஒரு சிறிய வாய்ப்பையும் விடக்கூடாது என்று பல்வேறு விதமான வியூகங்களை வகுத்து வருகிறார்கள். 
 

இதையடுத்தான் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது. மிகவும் உஷாராகவும், கண்காணிப்புடனும் இருக்க வேண்டும். பயப்பட வேண்டாம். நீங்கள் உண்மைக்காக போராடுகிறீர்கள். போலியான கருத்துக்கணிப்பு பிரசாரத்தினால் மனம் உடையாதீர்கள். உங்கள் மீதும் காங்கிரஸ் மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய கடினமான உழைப்பு வீண் போகாது" என தெரிவித்துள்ளார். 
 

ராகுல்காந்தியின் இந்த டுவிட்டர் பதிவு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமேதி தொகுதியில் மீண்டும் போட்டி?; மெளனம் கலைத்த ராகுல் காந்தி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Rahul Gandhi broke the silence and answered Re-contest in Amethi constituency?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலுக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (03-04-24) வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. .

இதற்கிடையில், அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டாக சேர்ந்து நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது, ராகுல் காந்தியிடம், அமேதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “இது பாஜகவின் கேள்வி, மிகவும் நல்லது. கட்சித் தலைமையிடம் இருந்து எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன். எங்கள் கட்சியில், இந்த வேட்பாளர்களின் தேர்வு முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.