மத்திய பாஜக அரசை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று சென்னை கடற்கரை இரயில் நிலையம் அருகே உள்ள தபால் நிலையத்தின் வெளியே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், ‘விலைவாசி உயர்வுக்கு காரணமான, வேலையின்மையை அதிகரித்துள்ள, மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கிற, சொந்த இலாபங்களுக்காக நாட்டை விற்கிற, இந்தியை திணித்து தமிழை ஒழிக்கிற, ரூ. 7.50 லட்சம் கோடி ஊழல் பா.ஜ.க.வே ஆட்சியைவிட்டு வெளியேறு’ என முழக்கங்கள் இடப்பட்டது.
பா.ஜ.க.வே ஆட்சியை விட்டு வெளியேறு - இந்தியக் கம்யூனிஸ்ட் போராட்டம் (படங்கள்)!
Advertisment