Skip to main content

தேர்தல் குறித்த கேள்வி: “நன்றி, வணக்கம்” என்று நழுவிய நயினார் நாகேந்திரன்

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

Question of election; "Thank you, hello," said Nayanar Nagendran

 

திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 30 லட்சம் ரூபாய்க்கு திருமண மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். 

 

விழா முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாடு பட்ஜெட்டில் கிள்ளிகுளத்தில் மட்டும் 15 கோடி மதிப்பீட்டில் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்கள். திமுக கொண்டு வந்த திட்டங்கள் நல்ல திட்டங்கள் தான். ஆனால் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தென் மாவட்டங்களை பொறுத்தவரை குறிப்பாக குமரி மாவட்டம் என்பது முழுவதும் நஞ்சையாகவும் தென்னையாகவும் இருக்கும் மாவட்டம். நாஞ்சில் நாடு எனச் சொல்வார்கள். அதேபோல் திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலும் நஞ்சை அதிக அளவில் உள்ளது. இப்பகுதிகளில் நெல் ஆராய்ச்சி மையம் ஏற்கனவே இருந்து, இப்பொழுது இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இதைக் குறித்தும் சட்டமன்றத்தில் நிச்சயமாக பேசுவோம். 

 

திருநெல்வேலி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களுக்கு முன்பே நான் சொல்லியுள்ளேன். முதலமைச்சரை இதற்கு முன் சந்திக்கும் போது, வட மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு உள்ளது. தென் மாவட்டங்களில் வறட்சி காணப்படுகிறது எனச் சொன்னேன். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசும் போது இதுகுறித்து கண்டிப்பாகப் பேசுவேன். தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என ஏற்கனவே சொல்லி இருந்தார்கள். மற்ற ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்டப்படும் என்று சொன்னார்கள். ஆனால், அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை. 

 

அதிமுக தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி. அதனுடன் தான் கூட்டணியில் உள்ளோம். இந்திய அளவில் பெரிய கட்சி, உலகளவில் அதிக எம்.எல்.ஏக்கள், அதிக எம்.பி.க்கள் கொண்ட கட்சி பாஜக. இரு கட்சிகளுக்குள்ளும் தலைமையில் எந்த மாற்றமும் இல்லை. கீழ்மட்டத்தில் உள்ள சிலர் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுகின்றனர். பெரிய கட்சி என்கிற போது இம்மாதிரியான சிக்கல்கள் இருக்கும். அது கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது. தேர்தலில் வேட்பாளர்கள் அறிவித்த பின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வேலை பார்க்கும் போது எவ்விதமான கருத்தும் மனமாட்சிமைகளும் நிச்சயம் இருக்காது” என்றார்.

 

தொடர்ந்து செய்தியாளர்கள், வரும் தேர்தலில் வேட்பாளராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதா எனக் கேட்டபொழுது நயினார் நாகேந்திரன் நன்றி வணக்கம் எனக் கூறி நழுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.