Skip to main content

“வளர்மதி நவீன புரட்சித் தலைவி...” - இ.பி.எஸ் அணியின் மீது புகழேந்தி பாய்ச்சல்

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

pugazhenthi talk about admk and edappadi palanisamy

 

திருச்சியில் வருகின்ற 24-ஆம் தேதி எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா, ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா மற்றும் கட்சி 50 ஆண்டுகள் முடிந்து 51 வது ஆண்டின் துவக்க விழா என முப்பெரும் விழா நடைபெற உள்ளது. அதற்கான முன்னுரையாக நேற்று திருச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஓபிஎஸ் தலைமையிலான தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

இந்தக் கூட்டத்தில் மருது அழகுராஜ் பேசுகையில், “அநீதி எழும்போதெல்லாம் திரைப்படத்தில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ராஜ்கிரண் வருவது போல எடப்பாடியின் அரசியல் பித்தலாட்டத்தை கண்டு  எங்கள் அண்ணன் ஓபிஎஸ் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு நிற்கிறார். இபிஎஸ் என்ற துரோகியை குறித்து சொல்ல இருவர் இருந்தால், ஓபிஎஸ் என்ற உத்தமரை சொல்ல 4பேர் இருப்பார்கள். எனவே இங்குள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய பங்கிற்கு அதிகமான சீர் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். சமீபத்தில் ஒருவர் சீர் கொண்டு சென்றார். எடப்பாடி வயதிற்கு வந்துவிட்டாரோ? அதுவும் புதுக்கோட்டையில் இருந்து சீர் கொண்டு செல்லப்பட்டது. அந்த சீரில் குட்கா கொண்டு சென்றுள்ளனர். ஓபிஎஸ் செய்த ஒரு தவறை இபிஎஸ்ஸை சொல்லச் சொல்லுங்கள். எடப்பாடி செய்த துரோகத்தை வெளிச்சம் போட்டு இந்த ஊருக்கு சொல்லும் நாள் ஏப்ரல் 24 தான், இலை கோட்டையின் பலத்தை இந்த மலைக்கோட்டையில் காட்ட வேண்டும். திருச்சியில்  கடல் இல்லை என்ற ஒரு குறையை ஏப்ரல் 24ஆம் தேதி கொண்டு வரவேண்டும். இதை பார்க்கும் இபிஎஸ்க்கு லூஸ்மோசன் போக வேண்டும்” என்றார்.

 

புகழேந்தி கூறுகையில், “பிரதமரை பார்க்க ஓபிஎஸ் வந்தபோது இபிஎஸ் ஓரமாக ஒதுங்கி நின்றார். ஆனால் பிரதமர் ஓபிஎஸ்ஸை சந்தித்தாரே அவருடைய காலில் வந்து விழச் சொல்லுங்கள். வழக்கு தோல்வி அடைந்து விட்டதாகப் பலர் என்னிடம் கேட்டார்கள். இது தர்ம யுத்தம் டெல்லி நீதிமன்றத்தில் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்துவோம் என்று கூறினேன். இபிஎஸ் மீது தேர்தல் ஆணையத்தில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் போட்டியிட வேண்டும் என இபிஎஸ் மனு அளித்தார். ஆனால் நீதிபதி தன்னால் விசாரிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். 1996ல் திருச்சியில் அன்று ஜெயலலிதா விடிய விடிய மாநாட்டை நடத்தினார்கள். நாம் நடத்தப்போகும் மாநாட்டில் நீங்கள் இராணுவ சிப்பாய்கள் போல இருந்து செயல்பட வேண்டும். எடப்பாடியை தகர்க்க எடப்பாடியில் இருந்து மிகப்பெரிய கூட்டம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இன்றைய காலகட்டத்தில்  நவீன பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் என்று பலர் அழைக்கப்படுகிறார்கள். அதில் பொன்னையன் தான் நவீன தந்தை பெரியார், அண்ணா யார் என்றால் கே.பி முனுசாமி, இன்னொருவர் தொப்பியும் கண்ணாடியும் போட்டுக் கொண்டு வலம் வந்தார்.  

 

வளர்மதி தான் நவீன புரட்சித் தலைவி, இது வெட்கக்கேடானது. அதேபோல் ஜெயகுமார் பேசுகிறார், "மாநாடு குறித்து பேசியவர் முதலில் தெருக்கூட்டம் என்றவர் கருப்புப் பணம் 200கோடியை வைத்து மாநாடு நடத்தப்படுகிறது" என்று கூறுகிறார். மாநாடு முடிந்த பிறகு மைதானத்தில் கிடக்கும் பிளாஸ்டிக் கேன்கள், பைகள் சேகரிக்கும் டெண்டரை ஜெயக்குமாருக்கு கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.  எடப்பாடி பல தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளார். ஆனால் ஓபிஎஸ் ஒரு முறை கூட தோற்கவில்லை. பிரதமர் ஓபிஎஸ்ஸை சந்தித்த போது தோளில் தட்டிக் கொடுத்ததற்கு காரணம் மீண்டும் நீங்கள் முதலமைச்சர் ஆவீர்கள் என்பதற்காகவே. ஓபிஎஸ் தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து விட்டுக்கொடுத்து விட்டுக் கொடுத்து நிறைய இழந்து விட்டார். ஆனால் தமிழக மக்கள் ஒருபோதும் ஓபிஎஸ்சை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.  தற்போது இருக்கும் சபாநாயகர் புத்திசாலியானவர். இபிஎஸ்சின் திட்டம் என்ன என்று நன்றாகத் தெரியும். சட்டமன்றத்தில் மிகச் சிறப்பாக இபிஎஸ்ஸை கையாண்டு வருகிறார்.  ஏப்ரல் 24 இபிஎஸ்ஸின் அரசியலுக்கு சாவு மணி அடிக்கும் மகிழ்ச்சியான தருணமாக அமைய வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.