Skip to main content

“உங்களுக்கு தெரியுமா அண்ணாமலை” - ஆதாரங்களை அடுக்கிய புகழேந்தி; வெளியில் நடமாடக் கூட முடியாது என்றும் எச்சரிக்கை

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

Pugazendi condemns Annamalai for talking about Jayalalithaa

 

ஜெயலலிதாவின் மறைவையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து,அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது. அதன் பிறகு பொதுக்குழு கூட்டப்பட்டு அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

இந்த நிலையில் சிவகங்கையில் நடைபெறும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கூட்டம் மற்றும் கட்சியின் பொதுக்குழு கூட்டமும் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பினர் காலை முதலே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, “அண்ணாமலை போல் அதிகமான ஐபிஎஸ் ஆபிசர்களுடன் பழகியவன் நான். ஆனால் உங்களுக்கு என்ன ஆனது என தெரியவில்லை. உங்களுக்கு மனநிலை சம்பந்தமாக அதிகமான பிரச்சனை இருக்கிறது என சொல்கிறார்கள். அதையெல்லாம் உறுதிப்படுத்துவது போல் நேற்று செய்தியாளர் சந்திப்பில் அவரது தாய் மற்றும் மனைவியும் ஜெயலலிதாவை விட பல மடங்கு உயர்ந்தவர் என சொல்கிறார். யார் இதையெல்லாம் உங்களிடம் கேட்டது.

 

அண்ணாமலைக்கு தெரியாது, கர்நாடகத்தில் கோபால் என்ற ஐபிஎஸ் ஆபீசர் இருந்தார். இப்பொழுது ஓய்வில் உள்ளார். சீனியர் ஐபிஎஸ் ஆபீசர். வீரப்பன் சுட்ட பொழுது 3 குண்டுகள் கழுத்தில் போய்விட்டது. அப்பொழுது சுய நினைவை இழந்துவிட்டார். கோவைக்கு கொண்டு வந்தார்கள். அப்பொழுது ஜெயலலிதா மருத்துவர்களை தொடர்பு கொண்டு என்ன ஆனாலும் விடாதீர்கள் கோபால் உயிர் பிழைக்க வேண்டும் என்று சொல்கிறார். கோபால் இன்று நல்லபடியாக உள்ளார். உங்களுக்கு தெரியுமா உங்களை தலைவராக ஆக்கிய அமித்ஷா தமிழகத்திற்கு வந்து ஜெயலலிதாவிற்கு மாலை போட்டு மரியாதை செய்த பின் ஓபிஎஸ்ஸை பார்த்து எவ்வளவு பெரிய தலைவி என சொன்னார். எடியூரப்பா, ஜெயலலிதா இறந்த பின் அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்த வந்து இரண்டு மணி நேரம் அங்கேயே இருந்தார். அடுத்து இந்நாட்டின் பிரதமர் மோடி. போயஸ் தோட்டத்திற்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்தார். இம்மாதிரி நூற்றுக்கணக்கான விசயங்களை சொல்ல முடியும். நீ அரைவேக்காடு. இங்கு சீண்டினால் யார் தடுத்தாலும் ஒன்றும் நடக்காது. மிக பக்குவமாக பேச வேண்டும். உனக்கு வயதும் அனுபவமும் போதவில்லை என ஏற்கனவே சொல்லியுள்ளேன்.

 

ஜெயலலிதாவை பேசிவிட்டு வெளியில் நடமாட கூட முடியாது. அந்த மாதிரியான நிலை ஏற்பட்டு விடும். நீங்கள் ஜெயலலிதாவை தவறாக பேசிய செய்தி கர்நாடகாவிற்கு சென்றால் அங்கு பாஜக தோற்றுவிடும். ஒரு தமிழர் வாக்களிக்க மாட்டார்கள். உங்களுக்கு எதாவது செக் செய்ய வேண்டும் என்றால் கீழ்பாக்கத்தில் சென்று செக் செய்து கொள்ளுங்கள்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.