புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் அதிமுகவுக்கு ஆதரவு கூடுதலாக இருந்த நிலையில் உட்கட்சி பதவி போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் அதிமுக சேர்மன் வேட்பாளராக ஒ.செ. சரவணன், திமுக வேட்பாளராக மாலா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
கறம்பக்குடி ஒன்றியத்தில் அதிமுக கூடுதல் கவுன்சிலர்கள் இருந்தும், சேர்மன் தேர்தலின்போது திமுக வேட்பாளர் மாலா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக வேட்பாளர் தமிழ்செல்வி சரவணன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதாவது திமுக வினர் அடையாள அட்டை இல்லாமல் வந்து கள்ள ஓட்டு போட்டுள்ளதாக அதிமுகவினர் மறியல் செய்து வரும் நிலையில் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.