Skip to main content

கிரண்பேடியை கண்டித்து  முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள்,  எம்எல்ஏக்கள்  கருப்பு சட்டை அணிந்து  கவர்னர் மாளிகை முற்றுகை! பரபரப்பு!

Published on 13/02/2019 | Edited on 13/02/2019


 

narayanasamy


 

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததிலிருந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும்,  முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே அதிகாரப் போட்டி நடந்து வருகிறது.  அரசு நிர்வாகத்தில் கிரண்பேடியின் தலையீட்டால் நிர்வாகம் செயல்படாமல் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக ஆளும் காங்கிரஸ் கட்சியும்,  அதன் தோழமைக் கட்சிகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
 

இந்நிலையில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கிரண்பேடி தீவிரம் காட்டி வருகிறார். கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 20000 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிந்து நீதிமன்றம் மூலம் அபராதம் விதிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  இது புதுச்சேரி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.  இதற்கு முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்,  அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். 
 

இந்நிலையில்  கிரண்பேடியின் அதிகார துஷ்பிரயோகத்தையும்,  அத்துமீறலையும் கண்டித்தும்,  கிரண்பேடிக்கு ஆதரவாக புதுச்சேரி அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 

முன்னதாக சட்டமன்றத்தில் இருந்து முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம்,  ஷாஜகான் மல்லாடி கிருஷ்ணாராவ்,  கமலக்கண்ணன்,  கந்தசாமி,  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சியான திமுக எம்எல்ஏ சிவா உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்தில் இருந்து ஊர்வலமாக வந்து கவர்னர் மாளிகை முன்பாக சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

மாநில வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கூறி போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.  அவர்களுக்கு ஆதரவாக கிரண்பேடியை கண்டித்து காங்கிரஸ்,  தி.மு.க,  கம்யூனிஸ்டுகள்,  விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்பினரும் குவிந்து வருகின்றனர்.  இதனால் கவர்னர் மாளிகை பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. அதையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.  டெல்லி ஆளுநருக்கு எதிராக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலின் போராட்டத்தை போன்றே கிரண்பேடிக்கு எதிராக ஆளும் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்துள்ள இந்த போராட்டம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.