Skip to main content

"அந்த ஆறு பேர் விரும்புவதையே மோடி செயல்படுத்துகிறார்!" - ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

puducherry election campaign rahul gandhi speech

 

புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, ஏ.எஃப்.டி. திடலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

 

puducherry election campaign rahul gandhi speech

 

அப்போது பேசிய ராகுல்காந்தி எம்.பி., "எவ்வளவு பேர் எந்த மொழி பேசுகின்றனர், எவ்வளவு பேர் ஒரு பண்பாட்டில் இருக்கிறார்கள் எனக் காங்கிரஸ் கருதுவதில்லை. புதுச்சேரி சிறிய மாநிலமாக இருக்கலாம்; ஆனால், மற்ற மாநிலங்களைப் போல முக்கியத்துவம் புதுச்சேரிக்கு உண்டு. இந்தியாவின் பல கலாச்சாரம், பல மொழிகள் தான் பலமாக இருப்பதாக காங்கிரஸ் ஆத்மார்த்தமாக நம்புகிறது. கலாச்சாரம், பண்பாடு, மாநில உரிமைகளை காங்கிரஸ் எப்போதும் பாதுகாக்கப் பாடுபடும். புதுச்சேரியை தங்கள் சொந்த சொத்தாக யாராவது கருதினால் அவர்கள் விரைவில் ஏமாறுவார்கள். புதுச்சேரிக்கு வெளியே இருப்பவர்களுக்கு அந்த மாநிலம் ஒருபோதும் சொந்தமாகாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அரசை கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செயல்படவிடவில்லை. தேசத்தின் பிரதமராக இருக்கும் மோடி, புதுச்சேரி மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொள்ளவில்லை. 

 

puducherry election campaign rahul gandhi speech

 

என்னைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிப்பதில்லை. புதுச்சேரி மக்களைக் காப்பாற்ற தர்மயுத்தத்தில் ஈடுபட உள்ளேன். எங்களுக்குத் தரும் வாக்கு புதுச்சேரி மக்களாகிய உங்களின் கனவுகளை நிறைவேற்றும். மத்திய அரசின் தைரியத்தில்தான் கிரண்பேடி அதிகாரத்தைக் கையில் எடுத்துச் செயல்பட்டார். தமிழகத்தில் தமிழ் பேசக்கூடாது என்கிறார்கள்; அரசை எதிர்த்துப் பேசினால் தீவிரவாதி என்கிறார்கள். ஐந்து அல்லது ஆறு பணக்காரர்கள் விரும்புவதையே பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்துகிறார். ஆறு ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கைகள் பணக்காரர்களுக்காகவே இருந்துள்ளது. மோடி என்ன சொல்கிறாரோ, அதுதான் நாட்டின் சொந்த கருத்தாகக் கடைப்பிடிக்க வேண்டும் என நினைக்கிறார். மோடியின் உணவு, உடையை நாட்டு மக்களும் பின்பற்ற வேண்டும் என விரும்புகிறார்" என்றார். 

 

இந்தப் பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள், புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

puducherry election campaign rahul gandhi speech

 

முன்னதாக, புதுச்சேரியில் பாரதிதாசன் கல்லூரி மாணவிகளிடையே கலந்துரையாடிய ராகுல்காந்தி, "எனது தந்தையைக் கொன்றவர்கள் மீது எந்தக் கோபமும் இல்லை; நான் அவர்களை மன்னித்துவிட்டேன். என் தந்தையை இழந்தது மிகுந்த வலியை ஏற்படுத்தியது" என்று உருக்கமாகத் தெரிவித்தார். பின்பு மாணவிகளுடன் ராகுல் செல்ஃபி எடுத்துக்கொண்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுற்றித்திரிந்த சிறுவன்; பெற்றோரிடம் ஒப்படைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
cpm rescued boy who was wandering in Chidambaram and handed him over to his parents

புதுச்சேரி மாநிலம் மரப்பாலம் திருப்பூர் குமரன் நகரைச் சேர்ந்த முனுசாமி தீபா தம்பதியரின் மகன் கணேசன் (10 ) இந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவரை அவரது பெற்றோர்கள் கண்டித்ததால் சிறுவனுக்கு உறவினர்கள் அளித்த ரூ 500 கையில் இருந்ததால் பெற்றோர்கள் மீது உள்ள கோபத்தில் அதை எடுத்துக் கொண்டு புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த பேருந்தில் ஏறி சிதம்பரத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அவர் திங்கள்் கிழமை இரவு கஞ்சி தொட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் அப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார்.  இதனை கண்காணித்த அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்குழு உறுப்பினரான சின்னையனிடம் ஒப்படைத்தனர்.  சிறுவனிடம் அவர் பேச்சு கொடுத்து அவர் யார் எங்கிருந்து வந்தார் என்பது குறித்த அனைத்து விவரங்களையும் கேட்டுள்ளார்.

பின்னர் இதனிடையே அவரது தாயின் செல்போன் எண்ணை அந்த சிறுவன் கூறியதால் அவரது தாயருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுவனின் குடும்பத்தார் புதுச்சேரி காவல் நிலையத்தில் இது குறித்து ஏற்கனவே புகார் செய்துள்ளனர். மகன் சிதம்பரத்தில் உள்ளான் என்ற தகவல் கேட்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்து அங்கிருந்து காரில் புறப்பட்டு உடனடியாக சிதம்பரத்திற்கு திங்கள் கிழமை இரவு வந்தனர்.

இதனிடையே சிறுவனை மீட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் குழு உறுப்பினர் சின்னையன் சிறுவனுக்கு அவரது வீட்டில் உணவு வழங்கி கட்சியின் அலுவலகத்திற்கு அழைத்து வந்து  அவரது  பெற்றோர்களிடம் ஒப்படைத்தார். மகன் கிடைத்த மகிழ்ச்சியில் சிறுவனின் பெற்றோர்கள் உறவினர்கள் கண்ணீர் மல்க அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ் ஜி.  ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா,  நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.