Skip to main content

புதுச்சேரியில் விவசாய பல்கலைக்கழகம் -  கமலக்கண்ணன் அறிவிப்பு! 

Published on 17/07/2018 | Edited on 17/07/2018
puducherry assembly


புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் கால்நடை கல்லூரிகளை இணைத்து மாநில வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து தெருவிளக்குகளிலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்படும் எனவும் தெரிவித்தார். 
 

 

 

இந்த கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, மீன்களை பதப்படுத்த ரசாயனம் பயன்படுத்துவதாக புகார் வந்தால் அதை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 
 

பின்னர் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா, அமைச்சர்கள் தங்கள் வகிக்கும் இலாக்காக்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை அவர்களது தொகுதிகளுக்கும் மட்டுமே நிறைவேற்றப்படுவதாக குற்றம் சாட்டினார். 
 

 

 

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி திட்டங்களை சீராக அனைத்து பகுதிகளுக்கும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த  நாராயணசாமி, ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கு  இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பினால் வரிசைப்படுத்தப்பட்டுள்ள 35 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை குடிமக்கள் தங்களின் முகவரிக்கான ஆதாரமாக சமர்பிக்கலாம் என்றும், இதற்கு அப்பகுதி சட்டமன்ற உறுப்பினரின் சான்றிதழ் கட்டாயமில்லை என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.