Skip to main content

தொடர்ச்சியாக விபத்து -தமிழக செய்தித்துறை அதிகாரிகள் பீதி!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

car


தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறைக்கு இது போதாத காலம் போலிருக்கிறது! மக்கள் தொடர்பு அலுவலர்கள் பலரும் விபத்தில் சிக்கித் தப்பித்து வருகிறார்கள். இதனால், அரசின் பணிகளைக் கவனிப்பதற்காக வெளியில் செல்ல அலுவலர்களிடம் அச்சம் சூழ்ந்திருக்கிறது!
 

         
தமிழக அரசின் ஒவ்வொரு ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்கள் மக்கள் தொடர்பு அலுவலர்கள் (பி.ஆர்.ஓ.க்கள்). ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் விழிப்புடன் இருக்க வேண்டிய பொறுப்பில் இவர்கள் இருக்கின்றனர். இந்த கரோனா காலத்தில் மேலும் பல பணிகளைச் சுமந்து வருகின்றனர். அப்படிப்பட்ட பி.ஆர்.ஓ.க்களுக்கு தற்போது நேரம் சரியில்லை! வாகனங்களில் செல்லும் போது ஆக்சிடெண்டில் சிக்கிக் கொள்கிறார்கள் பி.ஆர்.ஓ.க்கள்! 
               
நீலகிரி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோவன், அலுவல் பணி நிமித்தம் இரு சக்கர வாகனத்தில் பெருந்துறை சென்று விட்டு ஊட்டி திரும்பும் வழியில் விபத்து ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல் நலம் தேறியிருந்தாலும் தற்போது வரை ஐ.சி.யூ.வில் இருக்கிறார். 
 

                  
நெல்லை மாவட்ட பி.ஆர்.ஓ. செந்தில், இரு சக்கர வாகனத்தில் வலங்கைமான் சென்று விட்டு மீண்டும் நெல்லைக்குத் திரும்பும் வழியில் விபத்தில் சிக்கினார். தஞ்சையிலுள்ள மதுரை மிஷன் மருத்துவமனையில் ஐ.சி.யூ.வில் சேர்க்கப்பட்டார் செந்தில். டாக்டர்களின் தீவிர சிகிச்சையில் குணமடைந்து வருகிறார். ஐ.சி.யூ.விலிருந்து இன்னும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை ! 
                  
சேலம் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரைக்கு ஏற்பட்ட வாகன விபத்தில், கால் எலும்பு விரிசல் கண்டது. தீவிர சிகிச்சையளிக்கப்பட்டதில் குணமடைந்து வருகிறார் அண்ணாதுரை. 
                        
செங்கல்பட்டு மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலராக இருக்கிறார் ராஜகணேஷ். இவரும் சமீபத்தில் வாகன விபத்தில் சிக்கி, மருத்துவச் சிகிச்சைக்குப் பின் தற்போது மருத்துவ விடுப்பில் வீட்டில் இருக்கிறார்.   
        

http://onelink.to/nknapp


சென்னையில் கூடுதல் இயக்குநராக உள்ள அம்பலவாணன், மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ்ச்செல்வன், புகைப்படக்காரர் விஜய் ஆகியோர், பொலேரோ ஜீப்பில் சென்றபோது விபத்தில் சிக்கினர். சிறு காயங்களுடன் அவர்கள் தப்பித்தனர். மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொண்டதற்குப் பிறகு தற்போது அலுவலகம் வந்து போகின்றனர். 
                         
தமிழக செய்தித் துறையின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் அலுவலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்ச்சியாக விபத்து ஏற்படுவது கண்டு, செய்தித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.