Skip to main content

சொத்துத் தகராறு!!! காடுவெட்டி குரு மகன் - உறவினர்கள் மோதல்: போலீசார் விசாரணை 

Published on 27/05/2020 | Edited on 27/05/2020


முன்னாள் பா.ம.க. எம்.எல்.ஏ.வும், வன்னியர் சங்கத் தலைவருமான மறைந்த காடுவெட்டி குருவின் மகன் மீது சிலர் தாக்குதல் நடத்தியதாகக் காலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக மீன்சுருட்டி காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


காடுவெட்டி குருவின் தந்தை ஜெயராமன். ஜெயராமனின் சகோதரரின் மைத்துனர் சின்னபிள்ளை. காடுவெட்டி கிராமத்தில் உள்ள நாட்டாமைகளில் சின்னபிள்ளையும் ஒருவர். குருவின் குடும்பத்திற்கும், சின்னபிள்ளை குடும்பத்திற்கும் சொத்துப் பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது. பாதை பிரச்சனையும் உள்ளது. குரு மறைந்த பிறகு அவ்வப்போது இதுதொடர்பாக குருவின் குடும்பத்தினருக்கும், சின்னபிள்ளை குடும்பத்தினருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது.
 

இந்தநிலையில் நேற்றும் குருவின் வீட்டாருக்கும், சின்னப்பிள்ளை வீட்டருக்கும் சொத்து தொடர்பாக பிரச்சனை நடந்துள்ளது. இதனை அறிந்த குரு மகன் கனலரசு, குருவின் மருமகன் மனோஜ் ஆகியோர் வந்துள்ளனர். சின்னபிள்ளை தரப்புக்கும், கனலரசு தரப்புக்கும் நள்ளிரவில் வாய்த் தகராறு நடந்துள்ளது. பின்னர் இருதரப்பும் மோதிக்கொண்டது. இதில் அரிவாள் வெட்டு, உருட்டுக்கட்டை அடி என விழுந்துள்ளது. குருவின் மருமகனுக்குத் தலையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. கனலரசனுக்கும் லேசான தாக்குதல் நடந்துள்ளது.


மனோஜ், கனலரசு ஆகிய இருவரும் உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு இருவரும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சின்னபிள்ளை தரப்பிலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் என்றும், அவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
 

இந்தச் சம்பவம் தொடர்பாக மீன்சுருட்டி காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னபிள்ளையை மீன்சுருட்டி காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓட்டுநருக்கு திடீர் உடல்நலக்குறைவு; கட்டுப்பாட்டை இழந்த பேருந்து

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Sudden illness of the driver; The bus lost control

கும்பகோணத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பேருந்து ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

ஜெயங்கொண்டத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று கும்பகோணம் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தை இயங்கிக் கொண்டிருந்த ஓட்டுநர் நடராஜனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் இருந்த கருங்கல் ஜல்லி குவியலில் இறங்கியது. தட்டுத்தடுமாறி நின்ற பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறங்கினர்.

இந்த விபத்தில் சிலருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட உடல்நிலை குறைவால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஒரு பள்ளத்தில் இறங்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

புளி பறிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதம்; கொலையில் முடிந்த சோகம்!

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

ariyalur jayankondam ilaiur samaveli tamarind fruit incident

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் சமவெளி என்ற பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருக்கு ராமச்சந்திரன், ராஜேந்திரன், சங்கர் என மூன்று மகன்களும் மணிமேகலை, சசிகலா என இரண்டு மகள்களும் என மொத்தம் ஐந்து பிள்ளைகள். அனைவருக்கும் திருமணமாகி அவரவர்க்கு சொத்துக்களை பிரித்துக் கொடுத்து தனித்தனியே வசித்து வருகிறார்கள்.

 

இந்நிலையில் புளியமரத்தில் பழம் பறித்து பங்கு பிரிப்பது சம்பந்தமாக சங்கர் மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரனுக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. சங்கருக்கு ஒதுக்கப்பட்ட புளியமரத்தில் ராஜேந்திரன், அவரது மகன் கவுண்டன், மகள் கவிதா ஆகிய மூவரும் பழம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சங்கர் சகோதரர் ராஜேந்திரனிடம், “எனக்கு சொந்தமான புளியமரத்தில் ஏன் பழம் பறிக்கிறீர்கள்” என்று கேட்டுள்ளார்.

 

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜேந்திரன், கவுண்டன், கவிதா ஆகிய மூவரும் சங்கரை கடுமையாகத் தாக்கியதால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜேந்திரன், கவுண்டன், கவிதா ஆகிய மூவரையும் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.