Skip to main content

பள்ளிகள் திறப்பு! கோட்டையில் நடக்கும் பேரங்கள்! 

Published on 04/06/2020 | Edited on 04/06/2020


   

fees



கரோனா தாக்கத்தால் நீட்டிக்கப்பட்டிருக்கும் 4-ஆம் கட்ட ஊரடங்கு மே 31-ஆம் தேதியோடு முடிவுக்கு வந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறந்து விடும் எனத் தனியார் பள்ளி-கல்லூரிகளின் உரிமையாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஊரடங்கை நீட்டித்து 5 ஆம் கட்ட பொது முடக்கத்தை ஜூன் 30 வரை அமல்படுத்தியிருக்கிறது மத்திய-மாநில அரசுகள். பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டதால் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி நிறுவனங்கள், தங்களின் வருவாய் முடங்கி விட்டதாகக் ‘கவலை’ப்படுகிறார்கள். 
 

            
அதேசமயம், பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டாலும், 10 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதால், ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து பள்ளிகளைத் திறந்து விடுவார்கள் என எதிர்ப்பார்த்தனர். ஆனால், தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதில் உறுதியான முடிவுகளை எடுக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை அவசரம் காட்டவில்லை.  

இதனால் மேலும் ‘கவலை’யடைந்துள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அதிகார மையத்தை ரகசியமாக அணுகியுள்ளன. அப்போது, ’பள்ளிகள் திறக்கப்படாததால் மிகுந்த நட்டத்தைச் சந்திக்கிறோம். இந்த மாதம் பள்ளிகள் திறக்கப்படாததால் முதல் தவனைக்கான கட்டணத்தை வசூலிக்க முடியவில்லை. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’ எனத் தங்களின் ‘கவலை’யை வெளிப்படுத்தியதுடன், பல்வேறு வகையிலான நிறுவனங்களுக்குத் தளர்வு செய்திருப்பது போல பள்ளிகளுக்கும் தளர்வு செய்து உடனடியாகப் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளன தனியார் கல்வி நிறுவனங்கள். 
 


கோரிக்கையைத் தொடர்ந்து சில பேரங்கள் பேசப்பட்டுள்ளன. இதனையடுத்து, ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் 10 'L' தந்தால் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என சொல்லப்பட்டிருப்பதாகக் கோட்டையில் எதிரொலிக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுத்தை நடமாட்டம்; தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Leopard movement; Holiday announcement for private school

சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் நேற்று (02.04.2024) இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறை சார்பில் கோவையில் இருந்து தனிப்படை ஒன்று விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் செம்மங்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று (03.04.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளி முதல்வர் கைது

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Principal of private school arrested in pocso

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே செயல்பட்டு வந்த தனியார் பள்ளியின் முதல்வர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி அடுத்த ரெட்டணை பகுதியில் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரின் பெற்றோர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 14ஆம் தேதி புகார் அளித்திருந்தனர். அதேபோல் மற்றொரு மாணவியும் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த வழக்கு விசாரணையில் மேலும் பல பள்ளி மாணவிகளுக்கு கார்த்திகேயன் பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை இன்று விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த தயாராகி உள்ளனர்.