Skip to main content

தனித் தேர்வர்களாக எழுத இருந்த மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்! -தமிமுன் அன்சாரி கோரிக்கை!

Published on 11/08/2020 | Edited on 11/08/2020

 

Thamimum Ansari

 

தனித் தேர்வர்களாக எழுத இருந்த மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று ம.ஜ.க. பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வேண்டுகோள் வைத்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

2019 - 2020-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை (PRIVATE CANDIDATE ) தனித் தேர்வர்களாக எழுத இருந்த மாணவர்கள் கரோனா காரணமாக தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இவர்களையும் அதே போல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

தமிழகத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தனித் தேர்வர்களாக 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத பதிவு செய்துள்ளார்கள். 

 

பள்ளிக்கூடத்தில் படித்த மாணவர்கள் எந்தப் பாடத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றார்களோ அதே பாடத்திட்டத்தின் கீழ்தான் தனித்தேர்வர்களான மாணவர்களும் தேர்வு எழுத ஆயத்தமாக இருந்தார்கள். அவர்களும் தங்களது எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு சிறப்பாக படித்திருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

 

அப்படிபட்ட மாணவர்கள் ஐந்து மாத காலமாக தேர்வு தள்ளிப்போனதால் மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறார்கள்.

 

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 11, 12-ஆம் வகுப்பு பள்ளியில் சேர்ந்து படித்த மாணவர்களில் பலர் இன்று பொறியாளர்களாகவும் (Engineer) மருத்துவர்களாகவும் (Doctor) இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

அது போல் 8-ஆம் வகுப்பை தனித் தேர்வர்களாக எழுத இருந்தவர்களும் இதே கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.

 

எனவே, தமிழகத்தில் ESLC, SSLC தேர்வினை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த அனைவரையும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றவர்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டுகிறோம். 

 

அரசுத் தேர்வுகள் துறை ஒவ்வொரு கல்வியாண்டும். 8-ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு நடத்தி அவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கி வருகின்றது. ஆனால், 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற 8-ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வில் சில தவிர்க்க முடியாத காரணத்தால் மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல் ELIGIBILITY CERTIFICATE வழங்கி, தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

http://onelink.to/nknapp

 

ஆகவே இக்கட்டான இக்கால நிலையில் தனித் தேர்வர்களாக விண்ணப்பித்த மாணவர்களின் மனநிலையையும், முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, தமிழக அரசு 2019-2020 ஆம் கல்வியாண்டில் ESLC மற்றும் SSLC தனித் தேர்வர்களாக தேர்வு எழுத இருந்த அனைத்து மாணவர்களுக்கும் தகுதி சான்றிதழ் (ELIGIBILITY CERTIFICATE) அல்லது தரநிலை (GRADE) போன்ற தேர்ச்சி சான்றிதழை தமிழக அரசு வழங்கி அவர்கள் அனைவரையும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்படி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வேண்டுகிறோம்.  இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.

Next Story

ம.ஜ.க.வின் தலைவராக தமிமுன் அன்சாரி பொறுப்பேற்பு

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Tamimun Ansari took charge as the president of MJK

2015ம் ஆண்டு மனிதநேய ஜனநாயக கட்சி துவங்கப்பட்டு, அதன் பொதுச் செயலாளராக தமிமுன் அன்சாரி செயல்பட்டுவந்தார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது ம.ஜ.க. இதில், நாகப்பட்டினம் தொகுதியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்நிலையில், நேற்று தஞ்சாவூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழுவின் கூட்டத்திற்கு பின்பு மாலையில், தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துவரும், தமிமுன் அன்சாரி, கட்சி தலைவராக பொறுப்பேற்றார். மேலும், அவர் வகித்துவந்த பொதுச் செயலாளர் பதவிக்கு மௌலா. நாசர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பொருளாளராக ரிஃபாயீ, துணைத்தலைவராக மன்னை. செல்லச்சாமி, இணைப் பொதுச்செயலாளராக செய்யது அகமது ஃபாரூக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவைத்தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் இனி கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.