Skip to main content

”மத்தியில் ஆட்சி மாற்றத்தின் மூலம் விவசாயப் பொருட்களின் விலை குறையும்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
price of agricultural products will decrease with the change of central government says Minister I. Periyasamy

தி.மு.க. கூட்டணி கட்சியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான சச்சிதானந்தத்தை ஆதரித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதி முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அதுபோல் ஆத்தூர் தொகுதியில் உள்ள முருநெல்லிக்கோட்டை, கரட்டுப்பட்டி, குருநாதநாயக்கனூர், ஜி.நடுப்பட்டி, கே.புதுக்கோட்டை, பண்ணைப்பட்டி, ஸ்ரீராமபுரம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் ஐ.பெரியசாமி சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்துடன் திறந்த ஜீபபில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அமைச்சரும், வேட்பாளரும் செல்லும் ஒவ்வொரு பகுதிகளிலும் மக்கள் பெருந்திரளாக நின்று ஆரத்தி எடுத்தும், மாலை மற்றும் சால்வை அணிவித்து, அமைச்சரையும், வேட்பாளரையும் வரவேற்றனர். அதோடு எங்கள் ஓட்டு அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்திற்குத்தான் போடுவோம் என்று வெளிப்படையாகவே அமைச்சரிடம் கூறினர்.

price of agricultural products will decrease with the change of central government says Minister I. Periyasamy

அதைத் தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமியும் பொது மக்கள் மத்தியில் பேசும்போது, “இப்பகுதியில் ஆரம்ப சுகாதாரநிலையம் கட்டித் தரப்படும். அதோடு ஏடி காலனியில் நவீன வசதிகளுடன் ஒருகோடி செலவில் திருமண மண்டபம் கட்டித் தரப்படும். அதுபோல் ரோடு மின்விளக்கு உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கூடிய விரைவில் நிறைவேற்றித் தரப்படும். மத்தியில் ஆட்சி மாற்றத்தின் மூலம் நூறு நாள் வேலை, நூற்று ஐம்பது நாளாக ஏன் இருநூறு நாளாக கூட உயர்த்தப்படும். அதுபோல் கூலியும் நானூறு வழங்கப்படும். சிலிண்டர் விலை ரூ.500க்கு கொடுக்கப்படும். அதுபோல் பெட்ரோல் டீசல் விலையும் குறையும். இப்பகுதியில் உள்ள விவசாய பெருங்குடி மக்களான உங்களுக்கு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதின் மூலம் உரம், பூச்சிமருந்து உட்பட விவசாய பொருட்களின் விலையும் குறையும். ஜிஎஸ்டி எல்லாம் கட்டவும் தேவையில்லை” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.