Skip to main content

டெல்லி திடீர் அழைப்பு! தமிழக பாஜக தலைவராகிறாரா நயினார் நாகேந்திரன்?

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

 

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து தமிழக பாஜகவுக்கு தலைவர் பதவி நியமிக்கப்படாமல் இருந்தது. 

 

Nainar Nagendran



தலைவர் பதவிக்கு ஏற்கனவே தலைவராக இருந்தவர்களும், மாநில பொறுப்பில் இருக்கும் பலரும் தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று டெல்லியில் உள்ளவர்களை சந்தித்து அழுத்தம் கொடுத்தனர். டெல்லியோ தற்போதைக்கு தலைவர் பதவியை நியமிக்காமல் அப்படியே இழுத்தடித்து வந்தது. 


 

இந்த நிலையில் புதுக்கோட்டையில் நடந்த திருமண விழா ஒன்றில் பாஜக மாநில துணைத் தலைவர் அரசக்குமார், அதே திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்த்து பேசினார். மேலும், எம்.ஜி.ஆருக்கு பிறகு நான் ரசித்த தலைவர் மு.க.ஸ்டாலின்தான். இயக்கத்திற்காக நன்றி கடன் பட்டவன். காலம் கனியும், காரியங்கள் தானாக நடக்கும். தளபதி அரியணை ஏறுவார். அதையெல்லாம் நாம் பார்த்து அகம் மகிழ்ச்சி அடைவோம் என்று பேசினார்.
 

இவரது பேச்சு மாநில பாஜகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் தமிழக பாஜக தலைமை அலுவலக பொறுப்பாளரும், மாநில பொதுச் செயலாளருமான கே.எஸ்.நரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜ துணை தலைவர் பி.டி.அரசகுமாரின் பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறிய செயலாக கருதப்படுவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

மாநில தலைமைக்கு தலைவர் இல்லாத காரணத்தினால் நிர்வாகிகள் சிலரே இப்படி கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுகின்றனர். ஆகையால் விரைவில் பாஜக மாநில தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் டெல்லிக்கு அழுத்தம்கொடுத்துள்ளனர்.
 

இந்த நிலையில் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்தவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் திடீரென்று டெல்லி அழைத்ததன் பேரில் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இதுகுறித்து விசாரித்தபோது, தலைவர் பதவி அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறோம் என்றனர் பாஜகவினர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.