Advertisment

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடலுக்கு தேர்தல் அரசியல் வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Advertisment

சளி, மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 24-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகனுக்கு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்தச் சூழலில் இன்று அதிகாலை 1 மணி அளவில் அவர் காலமானார். இந்தச் செய்தி திமுகவினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அன்பழகனின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், அரசியல் வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் மற்றும் சபரீசன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.