Skip to main content

‘கருணையிலே வள்ளலார்! கோபத்திலே அய்யனார்! குணத்தினிலே எம்.ஜி.ஆர்.!’ -போஸ்டர்களில் ‘கெத்து’ காட்டும் அமைச்சர்கள்!

Published on 27/07/2020 | Edited on 27/07/2020

 

 

சுவர்களில் காணப்படும் வால்போஸ்டர்கள் ஒவ்வொன்றும் ஒரு சேதி சொல்லும். அவற்றில் இடம்பெற்றுள்ள வாசகங்களுக்குள் ஊடுருவினால், ‘உண்மை’ பளிச்சிடும்! அதுபோன்ற சில போஸ்டர்களை பார்ப்போம்!

 

‘இன்றுமுதல் செல்லூர் ராஜூ.. மதுரை மீண்ட சுந்தரபாண்டியர்!’ என்னும் தலைப்பில், போஸ்டர்   மூலம் அவரது விசுவாசிகள்  வெளிப்படுத்திய ‘கரோனா கொண்டாட்டம்’ குறித்து, கடந்த 18-ஆம் தேதி, நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். 

 

அந்த கட்டுரையில், பாமரர்கள் பலருக்கும் புரியாதபடி, செல்லூர் ராஜு ஆதரவாளர்கள், போஸ்டரில் நீட்டி முழக்கி சொன்ன விஷயத்தை, 57 வருடங்களுக்கு முன்பே, ‘தர்மம் தலைகாக்கும்..’ என்று பாட்டாகவே பாடிவிட்டார் எம்.ஜி.ஆர். என்று குறிப்பிட்டிருந்தோம். 

 

நக்கீரன் இணைய செய்தி செல்லூர் ராஜு ஆதரவாளர்களின் கண்ணில்பட, ‘மக்களுக்கு புரியும் விதத்தில் சிம்பிளாக சொல்வோமே!’ என்று யோசித்து, ‘செய்த தர்மம் தலைகாக்கும்..’ என்று புதிய டிசைனில், தற்போது போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர். மேலும், கிறிஸ்தவ, இஸ்லாமிய வாக்காளர்களைக் கவரும் விதத்தில், தேவாலயம், மசூதி படங்களின் பின்னணியிலும் போஸ்டர்கள் முளைத்துள்ளன.

 

முன்பெல்லாம், அதிமுக தலைமையைத்தான் ‘குலசாமி’ என்று போஸ்டரில் குறிப்பிடுவார்கள். இன்றோ, செல்லூர் ராஜுவை ‘குலசாமி’ ஆக்கி, அதற்கு விளக்கம் வேறு தருகின்றனர். தமிழகத்தின் குலசாமி ஜெயலலிதா என்றால், மதுரை மேற்கு தொகுதியின் குலசாமி செல்லூர் ராஜு என்கிறார்கள்.  

 

அமைச்சர் செல்லூர் ராஜுவுக்குப் போட்டியாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதரவாளர்கள், அவரை ‘வள்ளலார்’ என்றும் ‘அய்யனார்’ என்றும் போஸ்டர்களில் துதி பாடுகின்றனர். எப்படி தெரியுமா, ‘கருணையிலே வள்ளலார்!  கோபத்திலே அய்யனார்! குணத்தினிலே எம்.ஜி.ஆர்.!’ என, மதுரை புறநகர் மாவட்டத்தில் போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர். 

 

மதுரையில் திமுக போஸ்டர்கள் எங்கேனும் தென்படுகின்றனவா என்று தேடினால், ‘அண்ணன் மு.க.அழகிரியை ஒருமையில் திட்டாதீர்கள்! திமுகவை அவதூறாக பேசாதீர்கள்!’ என்று முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா போன்ற அரசியல் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர், அவரது ஆதரவாளர்கள். 

 

விருதுநகரில், மு.க.ஸ்டாலின், மா.செ.க்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு மற்றும் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (திமுக) எம்.எல்.ஏ., படங்களைப் போட்டு, இரண்டு டிசைன்களில் போஸ்டர் ஓட்டியிருந்தனர். அது என்ன போஸ்டர் தெரியுமா, விருதுநகர் ஏ.டி.பி. காம்பவுண்டு, 3-வது மற்றும் 4-வது தெரு பகுதிகளின் நீண்டநாள் பிரச்சனையாம்.. அந்த குடிதண்ணீர் பிரச்சனையை சரிசெய்ய, ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், எம்.எல்.ஏ.  நகராட்சி அதிகாரிகளிடம் பரிந்துரை செய்தாராம். அதற்கு உறுதுணையாக இருந்தாராம், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.பி.மதியழகன். அதற்கு நன்றி தெரிவிக்கவே இந்த போஸ்டர்களாம்! குடிதண்ணீர் பிரச்சனை சரியாவதற்கு முன்பே நன்றி அறிவிப்பு போஸ்டர்கள்! பலே! பலே!

 

பேனர்கள் விஷயத்தில் சட்டம் கறாராக இருப்பதால் வால்போஸ்டர்கள், அரசியலை வாழவைக்கின்றன! 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.