Skip to main content

மீண்டும் மீண்டும் சசிகலா வரவேற்பு போஸ்டர்.. அதிர்ச்சியில் அதிமுக தலைமை..!

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

Poster controversy over Sasikala's returns to Tamil Nadu ...

 

அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து சசிகலாவை வரவேற்று சுவரொட்டி விளம்பரங்கள் செய்து வருவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சி, தேனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களை, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிய நிலையில், மீண்டும் திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியில் அதிமுக சார்பில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

‘தீயசக்தி திமுகவை வீழ்த்த, கழகத்தை வழிநடத்த, கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்களே வருக, வருக’ என்று வாசகங்கள் அடங்கிய சுவரொட்டியை, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் முசிறி அதிமுக செயலாளர் சம்சுதீன் சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. 

 

அந்த சுவரொட்டி ஒட்டப்பட்ட சில மணி நேரங்களில் திருச்சி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், முசிறி பகுதியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள், சுவரொட்டி குறித்த தகவல்களைச் சேகரித்து தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

 

இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டதன் நோக்கம் குறித்து சம்சுதீன் கூறுகையில் “திமுகவை வீழ்த்த அதிமுகவால் மட்டுமே முடியும். அதிமுக என்பது பிரிந்து இருக்கக்கூடிய அதிமுகவும் அமமுகவும். இவை இரண்டும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே திமுகவை வீழ்த்தி, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியும். எனவே அதிமுகவும் அமமுகவும் இணைந்து ஒரே அதிமுகவாக செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்”  என்று கூறியுள்ளார். 

 

அதேபோன்று, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், அதே முசிறி பகுதியில், 18-வது வார்டு செயலாளராக இருக்கும் ராஜ்பாத் என்கிற அதிமுக உறுப்பினர், சசிகலாவை வரவேற்று சுவரொட்டி விளம்பரம் செய்துள்ளார். இந்த இரண்டு சுவரொட்டி விளம்பரங்களும் முசிறி பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டினாலோ ஆதரித்து பேசினாலோ அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அதிமுக உறுப்பினர்கள் ஆங்காங்கே சசிகலா ஆதரவு போஸ்டர்களை ஒட்டிவருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெங்கிவரும் வேளையில் சசிகலாவின் வருகை அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.