Skip to main content

மீண்டும் மீண்டும் சசிகலா வரவேற்பு போஸ்டர்.. அதிர்ச்சியில் அதிமுக தலைமை..!

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

Poster controversy over Sasikala's returns to Tamil Nadu ...

 

அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து சசிகலாவை வரவேற்று சுவரொட்டி விளம்பரங்கள் செய்து வருவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சி, தேனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களை, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிய நிலையில், மீண்டும் திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியில் அதிமுக சார்பில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

‘தீயசக்தி திமுகவை வீழ்த்த, கழகத்தை வழிநடத்த, கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்களே வருக, வருக’ என்று வாசகங்கள் அடங்கிய சுவரொட்டியை, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் முசிறி அதிமுக செயலாளர் சம்சுதீன் சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. 

 

அந்த சுவரொட்டி ஒட்டப்பட்ட சில மணி நேரங்களில் திருச்சி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், முசிறி பகுதியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள், சுவரொட்டி குறித்த தகவல்களைச் சேகரித்து தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

 

இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டதன் நோக்கம் குறித்து சம்சுதீன் கூறுகையில் “திமுகவை வீழ்த்த அதிமுகவால் மட்டுமே முடியும். அதிமுக என்பது பிரிந்து இருக்கக்கூடிய அதிமுகவும் அமமுகவும். இவை இரண்டும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே திமுகவை வீழ்த்தி, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியும். எனவே அதிமுகவும் அமமுகவும் இணைந்து ஒரே அதிமுகவாக செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்”  என்று கூறியுள்ளார். 

 

அதேபோன்று, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், அதே முசிறி பகுதியில், 18-வது வார்டு செயலாளராக இருக்கும் ராஜ்பாத் என்கிற அதிமுக உறுப்பினர், சசிகலாவை வரவேற்று சுவரொட்டி விளம்பரம் செய்துள்ளார். இந்த இரண்டு சுவரொட்டி விளம்பரங்களும் முசிறி பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டினாலோ ஆதரித்து பேசினாலோ அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அதிமுக உறுப்பினர்கள் ஆங்காங்கே சசிகலா ஆதரவு போஸ்டர்களை ஒட்டிவருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெங்கிவரும் வேளையில் சசிகலாவின் வருகை அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.