Skip to main content

“எழுவர் விடுதலையில் நீதிமன்றத்தின் நிலைப்பாடு ஏற்புடையதல்ல..” - ஹெச்.ராஜா

Published on 03/02/2021 | Edited on 03/02/2021

 

"The position of the court in the release of the seven is not appropriate." - H. Raja

 

"ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைக் கைதிகளாக இருக்கும் எழுவரின் விடுதலை குறித்த பொறுப்பை ஆளுநரிடம் ஒப்படைத்ததே தவறு. நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு ஏற்புடையதல்ல” என நீதிமன்றத்திற்கு எதிராக தன்னுடைய கருத்தைப் பதிவு செய்திருக்கின்றார் பாஜகவின் ஹெச்.ராஜா.

 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக நாடு முழுவதும் 13 கோடிக்கும் மேலான மக்களைச் சந்தித்தும், குறிப்பாக தமிழகத்தில் 40 லட்சம் மக்களைச் சந்தித்து நிதி திரட்டி வருகின்றது விஸ்வஹிந்து பரிஷித் அமைப்பு. 31-01-2021 தொடங்கி 28-02-2021க்குள் நிதி திரட்டும் காலமாக கணக்கிட்டு, அதனின் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டத்தில் நிதி திரட்டி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹெச்.ராஜா முன்னிலையில் சிவகங்கையில் நிதி சேகரிப்பு தொடங்கப்பட்டு, இன்று காரைக்குடியிலுள்ள ராம நவமி மண்டபத்தில் நிதியினை சேகரித்தனர்.

 

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, "எழுவர் விடுதலையைப் பொறுத்தவரை அவர்கள் அனைவரும் குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனையை அனுபவித்து வருபவர்கள். எழுவர் விடுதலையில் நீதிமன்றம், விடுதலை செய் அல்லாது செய்யாதே என்று சொல்ல வேண்டும். அதைவிடுத்து ஆளுநரிடம் தள்ளிவிட்டது தேவையில்லாத செயல். ஆளுநர் எப்படி இதற்குப் பொறுப்பாவார்? இது எனக்கு ஏற்புடையது அல்ல.

 

திமுக விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்கிறது. காங்கிரஸோ விடுதலை செய்யக்கூடாது என்கின்றது. இதில் எப்படி ஆளுநர் தலையிட முடியும் என்றவர், தொடர்ந்து "இந்து மதத்தை இழிவாக பேசிய வைரமுத்துவை கைது செய்யாத காவல்துறை, கல்யாணராமனை கைது செய்தது ஏன்? பாஜக கட்டுப்பாட்டில் தமிழக அரசு இருந்திருந்தால் வைரமுத்துவை கைது செய்திருக்கும், கல்யாணராமனை கைது செய்திருக்காது. தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிரான பாரபட்சத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார் அவர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.