Skip to main content

அமலாக்கத்துறையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம்

Published on 12/12/2020 | Edited on 12/12/2020
ddd

 

பாப்புலர் ஃப்ரண்ட்-அலுவலகம் மற்றும் தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியினர் கூறுகையில், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள், அமைப்புகள் மீது தொடர்ச்சியான அடக்குமுறையை ஏவி அச்சுறுத்தி வருகின்றது மத்திய அரசு. 

 

அதற்காக CBI, NIA, ED (அமலாக்கத்துறை) போன்ற ஏஜன்ஸிகளை அடியாட்கள் போன்று பயன்படுத்தி வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்கள், மக்கள் மீது UAPA கருப்பு சட்டத்தை கொண்டு ஒடுக்கி வருகின்றனர். 

 

ddd

 

குறிப்பாக மக்களுக்காக குரல் கொடுக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் போன்ற சமூக அமைப்புகள் மீது அவதூறு பரப்பும் நோக்கில் ஊடகங்களில் பொய் செய்தியை பரப்புவது, NIA, ED (அமலாக்கத்துறை) போன்ற அரசு ஏஜன்ஸிகளை கொண்டு 'ரெய்டு' என்ற பெயரில் அச்சுறுத்தல் செய்வது என ஜனநாயகத்தின் குரல்களை நெறிக்கும் வேலையை செய்து வருகின்றனர். 

 

இந்நிலையில் கடந்த டிசம்பர் 3 அன்று பாப்புலர் ஃப்ரண்ட்-அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு என்ற பெயரில் அத்துமீறலை நிகழ்த்தியது. இது முழுக்க ஆர் எஸ் எஸ்-சால் திட்டமிடப்பட்டு பாஜக அரசின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட அத்துமீறலாகும். 

 

ddd

 

அரசை கேள்வி கேட்கும் நபர்களை குறிவைத்து மத்திய பாஜக அரசு மேற்கொள்ளும் இதுபோன்ற மக்கள் விரோத போக்கில் இருந்து ஜனநாயகத்தை காக்கவும் ஆர் எஸ் எஸ் - சின் கைப்பாவையாக செயல்படும் அமலாக்கத்துறையை கண்டித்தும் டிசம்பர்-11 சென்னை சேப்பாக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றனர். 

 

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் எம். முஹம்மது சேக் அன்சாரி ஆர்ப்பாட்டத்தில், பாப்புலர் ஃப்ரண்ட் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் மக்கள் இயக்கம். இந்திய அரசியல் சாசனத்தின் படி செயலாற்றுகிறது. இந்தியாவின் ஜனநாயகம், மதசார்பற்ற கோட்பாடுகளை உயர்த்தி பிடிக்கின்றது. இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. மக்களை பிளவுபடுத்தும் மனுதர்ம ஆட்சிக்கு எதிராக உரக்க குரல் கொடுக்கிறது. அரசின் மக்கள் விரோத சட்டங்கள் செயல்பாடுகளுக்கு எதிராக போராடுகிறது. எனவே தான் மத்திய அரசு பாப்புலர் ஃப்ரன்ட் ஐ குறிவைக்கிறது. 

 

அதே சமயம் ஆர் எஸ் எஸ் ஏற்றத்தாழ்வுகளை உயர்த்தி பிடிக்கிறது. சிறுபான்மை சமூகங்களான முஸ்லிம்களுக்கும், கிருஸ்தவர்களுக்கும் இந்தியாவில் இடம் இல்லை என்று கூறுகிறது. இவற்றிற்கு எதிராக பாப்புலர் ஃப்ரன்ட் உறுதியாக போராடுவதால்  மத்திய அரசை இயக்கும் ஆர் எஸ் எஸ் ஏஜென்சிகளை கொண்டு பாப்புலர் ஃப்ரன்ட் - ஐ முடக்க நினைக்கிறது. வலுவான சட்ட போராட்டங்கள் மூலமும், மக்கள் திரள் போராட்டங்கள் மூலமும் இத்தகைய சூழ்ச்சிகளை பாப்புலர் ஃப்ரன்ட் முறியடித்து தொடர்ந்து மக்களுக்கான பணிகளை முன்னெடுக்கும் என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

2024 ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
2024 Vck Awards Announcement!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமையினருக்கு, “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகள் 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ். பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்டோருக்கு  இதுவரை விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக - விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அம்பேத்கர் சுடர் விருது - நடிகர் பிரகாஷ்ராஜ், பெரியார் ஒளி விருது - வழக்கறிஞரும், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளருமான அருள்மொழி, மார்க்ஸ் மாமணி விருது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், காமராசர் கதிர் விருது - இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருது - பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை விருது - வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர்  எஸ்.என். சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருது - கல்வெட்டியலறிஞர் எ. சுப்பராயலுவுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா மே 25 ஆம் தேதி (25.05.2024) சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ளார்.