Skip to main content

பொன்பரப்பி, பொன்னமராவதிகள் தொடரக் கூடாது -கி.வீரமணி

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

 

பொன்பரப்பி, பொன்னமராவதிகள் தொடரக் கூடாது. ஜாதி நோய் ஒழிய  பாடுபடுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

பொன்பரப்பியைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஜாதியின் அடிப்படையில் கலவரம் மூண்டது என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்.

 

veeramani-k



சமுகவலைதளத்தில் குறிப்பிட்ட சமுகத்தைச் சேர்ந்தவர்கள் பற்றி கீழ்த்தரமாக - இன்னொரு பிரிவைச் சேர்ந்த யாரோ ஒருவரோ இருவரோ பதிவிட்டதன் அடிப்படையில், அந்தப் பகுதியில் கலவரமாக வெடித்துள்ளது.
 

பாதிப்புக்கு ஆளானவர்கள் காவல்துறைக்குச் சென்று முறையிட்ட போது, உரிய முறையில் பேசி, பெயர் சொல்லப்பட்ட குற்றவாளிகளைக் கைதுசெய்ய உத்தரவாதம் கொடுத்திருந்தால் அல்லது உடனே கைது செய்திருந்தால் பெரிய அளவுக்கு அது வெடித்திருக்க வாய்ப்பில்லை.
 

மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் எல்லாம் சட்டத்தின் அடிப்படையில், அவர்களுக்குரிய அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களின் கைகள் கட்டப்படாத வகையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால் ஒரு நொடிக்குள் பிரச்சினையைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள்.



 

எல்லாம் ஆட்சி அதிகாரம் படைத்த அரசியல்வாதிகளின் இறுகிய பிடிகளுக்குள் அதிகார வட்டம் சிக்கிக் கொண்டு விழிப்பிதுங்குவதால்,  உரிய நேரத்தில் “செய்யாமையானும் கெடும்” என்ற அடிப்படையில் பொன்னமராவதியில் எல்லாம் நடந்து கொண்டுள்ளன.
 

இந்தத் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட, பிரச்சினைக்குக் காரணமானவர்களை உடனே கைது செய்து சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 

பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், வருணாசிரம அடிப்படையில் சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஆக்கப்பட்டுள்ள நிலையில், மட்டத்தில் உசத்தி என்ற மூர்க்கத்தனத்தில் விழுந்து விடாமல், ஜாதி என்பது நம்மை இழிவுபடுத்தும் பிளவுபடுத்தும் ஒரு நோய் என்பதை உணர்ந்து தெளிவு பெற வேண்டும் என்பதே நமது அன்பு வேண்டுகோள்!.



 

தேர்தல் நேரத்தில் இந்த ஜாதி மோதல் - அதன் காரணமாக கலவரம் ஏற்படும் நிலைமைக்கு வித்திட மதவாத பிற்போக்கு சக்திகள் (சில இடங்களில் பெரியார் சிலைமீது காவி பெயிண்ட் வீச்சு போன்ற வரிசையில்) இவையும் திட்டமிடப்பட்டு காலக் குறி தவறி நடந்தவை. உண்மைக் குற்றவாளிகள் இருசாராருமின்றி,  வேறு சக்திகளாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.
 

வாழ்நாள் எல்லாம் ஜாதி ஒழிப்புக்காக ஓயாது பாடுபட்டவர் தந்தை பெரியார், ஜாதி ஒழிப்புக்காக சட்டத்தையே எரித்து பத்தாயிரம் பேர் சிறை சென்ற ஜாதி ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம், ஜாதியைத் தூக்கி எறிந்து மனிதராவோம்  - வாருங்கள்! இதுவே ஜாதி ஒழிப்பு, மனித உரிமை இயக்கமான திராவிடர் கழகத்தின் கனிவான வேண்டுகோள்! படித்த இளைஞர்கள், மாணவர்கள் அந்தந்த பகுதிகளில் ஜாதி ஒழிப்பை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்ற வேண்டுகோளையும் முன் வைக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தளராது செயல்பட்டு வருபவர்” - கமல்ஹாசன் வாழ்த்து

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

kamalhassan birthday wishes to k veeramani

 

திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி இன்று தனது 91வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் சென்று வாழ்த்தினார். அந்த புகைப்படங்களை அவரது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, “அகவையில் மட்டுமல்ல, சுறுசுறுப்பிலும் எங்களை எல்லாம் மிஞ்சிய மானமிகு அய்யா கி. வீரமணி அவர்களின் 91-ஆவது பிறந்தநாளில் நேரில் வாழ்த்தி வணங்கினேன். தங்களின் வழிகாட்டுதல் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்க வேண்டும். பெரியாரியப் பெரும்பணி தொடர வேண்டும்! சமூகநீதிக் களத்தில் ‘வீரமணி வெற்றி மணியாக ஒலிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இதனைத் தொடர்ந்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “தந்தை பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடரை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்பவரும், இடையறாத பணிகளுக்கிடையில் பேச்சு, எழுத்து, பத்திரிகை என்று தளராது செயல்பட்டு வருபவருமான என் மதிப்புக்குரிய நண்பர், திராவிடர் கழகத்தின் தலைவர், ஆசிரியர்  கி. வீரமணி அவர்களுக்கு இப்பிறந்தநாளில் என் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 

 

 

 

Next Story

“பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு பெரியாரின் கொள்கை தான் அடித்தளம்” - சோனியா காந்தி

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

Sonia Gandhi says Periyar's policy is the foundation to bring down the BJP

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மேலும், அடுத்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்கும் பா.ஜ.க. ஆட்சியை வீழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி தங்களது ஆதரவை பெருக்கி வருகின்றனர். அதே போல், பா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கி ஆதரவை பெருக்கி வருகின்றனர்.

 

இந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு, பெரியார் திடலுக்கு வருகை தர அழைப்பு விடுத்தும், இந்தியா கூட்டணியை முன்னெடுக்கும் பணிகளை பாராட்டியும் கடிதம் எழுதியிருந்தார். அவர் எழுதிய கடிதத்துக்கு சோனியா காந்தி பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “பெரியார் திடலுக்கு என்னை அழைத்தற்கு நன்றி. மேலும், இந்தியா கூட்டணி மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் நன்றி. 

 

சமூக நீதி தேவையின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் அனைவரையும் உள்ளடக்கிய முற்போக்கான செயல்களின் மூலம் தான் மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும். பெரியாரின் கொள்கையும், தொலைநோக்கு பார்வையும் தான் நம்மை வழி நடத்தும். மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வின் கருத்தியலை முறியடிக்க பெரியாரின் கொள்கைகள் தான் அடித்தளமாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.