பாமகவின் முக்கிய பிரமுகரும் வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குரு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இந்தநிலையில் அவரது குடும்பத்தினர் பாமகவுக்கு எதிராக பேசி வந்தனர். குறிப்பாக காடுவெட்டி குருவின் மகன் கனல் அரசனுக்கும் பாமகவிற்கும் கருத்துவேறுபாடு இருந்ததாகவும் அதனால் பாமகவை எதிர்த்து அவர் ஒரு சில கருத்துக்களை தெரிவித்த தாகவும் கூறப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kanal arasan 01.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
குரு மகன் கனல் அரசன் வேறு ஒரு முக்கிய அரசியல் கட்சியில் சேரலாம் என்ற வதந்தி கடந்த சில வாரங்களாக எழுந்து வந்தது. இந்தநிலையில் கனல் அரசன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கனல் அரசன் விரைவில் பாஜகவில் சேரலாம் என்றும் பாஜகவில் அவருக்கு முக்கிய பதவி கொடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பாஜகவுடன் இணக்கமாக பாமக இருந்து வரும் நிலையில் காடுவெட்டி குரு மகன் பாஜகவில் சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)