கூட்டணி பற்றி எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் அறிவிப்புகள் வருகின்ற அளவுக்கு மிக நெருக்கமாக கூட்டணி பேச்சுவார்த்தைகன் நடந்து வருகின்றன. எந்தெந்த கட்சிகள் என்று இப்போது சொல்வதற்கில்லை என்றார். மேலும், ரஜினிகாந்த் அறிக்கை தொடர்பாக பதில் அளிக்க அவர் மறுத்துவிட்டார்.

pon radhakrishnan

சமீபத்தில் பாஜக அமைச்சரும், தமிழக பொறுப்பாளருமான பியூஸ் கோயலுடன் அதிமுக தொகுதி பங்கீடு குழுவினர் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

Alliance elections parliment Pon Radhakrishnan
இதையும் படியுங்கள்
Subscribe