பிரதமர் நரேந்திரமோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதற்காக சென்னை வரும் இருவரையும் வரவேற்கும் விதமாக பாஜகவின் மாநில மீனவர் அணி சார்பில் சென்னை பாலவாக்கம் பல்கலைநகர் கடற்கரையில் இருந்து கடல் பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை தேசிய ஒற்றுமை கடல்வழி படகு பேரணி நடைபெற்றது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இந்த பேரணியை பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பொன்.ராதாகிருஷ்ணனும் படகு பேரணியில் பங்கேற்றார். சுமார் 90 படகுகளில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சென்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், மாமல்லபுரம் வரும் இரு தலைவர்களையும் வரவேற்கும் விதமாக இந்த பேரணி நடத்தப்பட்டது. கடல் கடந்து சீனா சென்று தொடர்பு வைத்திருந்த நம் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்த படகு பேரணி நடத்தப்பட்டது என்றார்.