மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை தமிழகத்தில் தொடங்கிய தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Advertisment

polling in kilpauk hospital

தேர்தல் நாளை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் முதன்முறையாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 103 ஆண்கள் மற்றும் 56 பெண்கள் உட்பட மொத்தம் 159 பேர் இதில் வாக்களிக்க உள்ளனர்.