Skip to main content

பிஜேபி வேட்பாளர் மீது போலீசார் வழக்கு பதிவு...!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

Police register case against BJP candidate

 

விழுப்புரம் மாவட்ட பிஜேபி கட்சித் தலைவராக இருப்பவர் கலிவரதன். இவர் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதி அதிமுக கூட்டணியில் பிஜேபி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர் மீது திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சிறுவனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவரது மனைவி (30) செல்லம்மாள் என்பவர் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் வேட்பாளர் கலிவரதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பத்துப் பேர் தங்கள் வீட்டுக்கு வந்து  கொலை மிரட்டல் செய்ததாக புகார் அளித்துள்ளார்.

 

இதுகுறித்து செல்லம்மாள் தனது புகாரில், “கடந்த 8ஆம் தேதி காலை 11 மணிக்கு எனது கணவர் பிரபுவை செல்ஃபோனில் தொடர்பு கொண்டார் பாஜக வேட்பாளர் கலிவரதன். அப்போது என் கணவரிடம் தேர்தல் எப்படி நடந்தது, வாக்குப்பதிவு அன்று உங்கள் ஊரில் எந்த அளவுக்கு வாக்குகள் பதிவானது, அதில் நமது தாமரை சின்னத்திற்கு அதிக வாக்குகள் விழுந்தனவா என்று விசாரித்தார். அப்போது எனது கணவர் தாமரைக்கு ஓட்டுக்கள் குறைவாகத்தான் பதிவாகியிருக்கும் என்றார். இதைக் கேட்ட கலிவரதன் செல்ஃபோனிலேயே எனது கணவரை ஆபாசமாக திட்டினார். அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு எனது கணவர் வெளியே சென்றுவிட்டார்.

 

இந்த நிலையில், அன்று இரவு 8.30 மணி அளவில் கலிவரதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் கொண்ட கும்பல், கையில் கம்பு தடிகளுடன் எங்களது வீட்டிற்குள் புகுந்து என் கணவரைத் தாக்குவதற்கு தேடினார்கள். அவர் அங்கு இல்லை. அப்போது, அவர்களை நான் தடுக்க முயன்றபோது என்னை ஆபாசமாக திட்டி, தடியைக் காண்பித்து அடித்துக்கொன்றுவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்து விட்டுச் சென்றனர்.” இவ்வாறு செல்லம்மாள் அவரது புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரது புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கலிவரதன் மற்றும் அடையாளம் தெரியாத அவரது ஆதரவாளர்கள் 10 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 147, 294, 506 (1) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர்.

 

கும்பலாக கூடி அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து, ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு கடந்த 8ஆம் தேதி திருக்கோவிலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தேர்தல் வாக்குப்பதிவு குறித்து பிஜேபி வேட்பாளர் கலிவரதன் தலைமையில் அதிமுக, பாமக மற்றும் பிஜேபி கூட்டணிக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து முக்கிய கட்சி பிரமுகர்களுடன் விபரங்கள் சேகரித்துள்ளனர். அந்தக் கூட்டத்திற்கு வருமாறு சிறுவனூர் பிரபுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் அவர் அந்தக் கூட்டத்திற்கு செல்லவில்லை என்றும் மேலும் தேர்தல் சமயத்தில் வாக்குகளைப் பெறுவதற்கான பரிவர்த்தனை கிராமம்தோறும் நடைபெற்றுள்ளது. அதைக் கட்சியினர் முறையாக செய்துள்ளனர் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் தொகுதி வாக்குகள் பிஜேபியின் தாமரை சின்னத்திற்கு அதிக அளவில் கிடைக்கவில்லை என்ற கோபம்தான் இந்தக் கொலை மிரட்டல் புகாருக்கு காரணமென்று அதிமுக, பாமக, பிஜேபி ஆகிய கூட்டணிக் கட்சியினர் கூறுகின்றனர். இதன் அடிப்படையிலேயே பிரபுவின் வீட்டுக்குள் புகுந்து மிரட்டல் விடுத்துள்ளனர். பிஜேபி வேட்பாளர் கலிவரதன், முன்பு பாமக சார்பில் முகையூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றிபெற்றவர். அதன் பிறகு பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து, தற்போது பிஜேபி கட்சியில் உள்ளார். மேலும், இவர் எம்எல்ஏவாக இருந்தது முதல் தற்போது வரை அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகள் மூலம் பரபரப்பாக பேசப்படும் அளவிற்கு அவரது செயல்பாடுகளும் இருந்து வருகின்றன என்கிறார்கள் தொகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.