Skip to main content

தேர்தலை நிறுத்த ஆளும் கட்சி முயற்சிக்கிறது... செந்தில்பாலாஜி

Published on 19/05/2019 | Edited on 19/05/2019

 

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக சார்பாக செந்தில்பாலாஜி, அதிமுக வேட்பாளராக செந்தில்நாதன், அமமுக சார்பில் சாகுல்ஹமீது ஆகியோர் போட்டியிடுகிறார்கள். 
 

இன்று காலை அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள தோட்டக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, 

 

 Senthil Balaji



அரவக்குறிச்சி தொகுதி வாக்குச்சாவடிகளில் காவல்துறை உயர் அதிகாரிகள் முதற்கொண்டு கீழ்நிலை வரை அந்தெந்த பகுதிகளுக்கு சென்று திமுகவினரை பணி செய்ய விடாமல் தடுக்கின்றனர். விதிமுறைக்கு உட்பட்டு 200 மீட்டர் தொலைவிலேயே பட்டா இடத்தில் டேபிள் சேர் போட்டு திமுகவினர் அமர்ந்துள்ளனர். அதனையும் போலீசார் தடுக்கின்றனர். முழுக்க முழுக்க அரவக்குறிச்சி இடைத்தேர்தலை காவல்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டிருக்கின்றன. 


 

 

விதிமுறையில் என்ன உள்ளதோ, அதனைத்தான் செய்கிறோம். விதிமுறையில் எந்த அரசியல் கட்சித் தலைவர்கள் புகைப்படமும் இடம் பெறக்கூடாது என்று இருக்கிறது. வேட்பாளர் படம், வேட்பாளர் சின்னம் இடம் பெறலாம் என்று இருக்கிறது. ஆனால் அதனையே வைக்கக்கூடாது என்கிறார்கள். ஆனால் ஆளும் கட்சியினர் அவர்கள் கட்சி தலைவர்கள் புகைப்படம், சின்னமும் போட்ட ப்ளக்ஸ் வைத்துள்ளனர். அவர்களுக்கு ஒரு நீதியும், எங்களுக்கு ஒரு நீதியுமாக காவல்துறை நடந்துகொண்டிருக்கிறது. அரவக்குறிச்சி தேர்தல் அலுவலரிடம் நாங்கள் முறையிட்டோம். அதற்கு அவர், நான் காவல்துறையிடம் சொல்லத்தான் முடியும், நான் என்ன செய்ய முடியும் என்ற கருத்தை அவர்கள் சொல்லுகிறார்கள். 


 

 

முழுக்க முழுக்க தேர்தல் அதிகாரியையும் தாண்டி காவல்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்து அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுத்தி வருகிறது. ஆளும் கட்சி வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். மக்களை அச்சுறுத்தலாம், துன்புறுத்தலாம், காவல்துறை ஓட்டுப்போடப்போவதில்லை. போலீசார் எப்படி நடந்து கொண்டார்கள் என்று மக்களை கேட்டுப்பாருங்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி தேர்தலை நிறுத்த ஆளும் கட்சி முயற்சி மேற்கொள்கிறது. அதற்கு நாங்கள் எந்த இடமும் கொடுக்க மாட்டோம். 
 

இந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு எப்படியாவது சாதகமாக செயல்பட வேண்டும் என்று காவல்துறை நினைக்கிறது. அதற்காக முனைப்போடு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி; காவலை நீட்டித்த நீதிமன்றம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Senthilbalaji who appeared in person; The court extended the custody

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். இதனையொட்டி செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி கடந்த முறை காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22 ஆம் தேதி வரை 33ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், அமலாக்கத்துறையின் வழக்கின் அசல் ஆவணங்களை பெற்றுகொள்ள சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று (22.04.2024) செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதற்காக புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 34 ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Senthil Balaji Bail Petition Notice to the enforcement department

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதற்கிடையே பலமுறை செந்தில் பாலாஜிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (01.04.2024) உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.