Advertisment

பாமகவில் இளைஞர்கள் நிறைந்துள்ளபோது அந்நிய அறிவுக்கு தேவையும் இல்லை; தேடலும் இல்லை! ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியுடன் இரண்டறக் கலந்த இளைஞர்கள் இயக்கத்தில் நிறைந்துள்ள நிலையில், அந்நிய அறிவுக்கு தேவையும் இல்லை; தேடலும் இல்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisment

Ramadoss

ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

''எந்தத் தேர்தலாக இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றியை தலைமையின் வழி காட்டுதலும், தொண்டர்களின் உண்மையான உழைப்பும், பாட்டாளிகளின் ஆதரவும் உறுதி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. மக்களிடம் செல்வோம்! அவர்களுக்காக உழைப்போம்!! அவர்களால் வெல்வோம்!!!''

''வெற்றிடங்களைத் தான் காற்று நிரப்பும். பாட்டாளி மக்கள் கட்சி அறிவார்ந்த இளைஞர்களும், உண்மையான தொண்டர்களும் நிறைந்த கட்சி. பாட்டாளி மக்கள் கட்சியுடன் இரண்டறக் கலந்த இளைஞர்கள் இயக்கத்தில் நிறைந்துள்ள நிலையில், அந்நிய அறிவுக்கு தேவையும் இல்லை; தேடலும் இல்லை!'' இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

twitter pmk Ramadoss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe