கரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில் ஊரடங்கைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று அடிக்கடி தொடர்புகொள்ளும் பிரதமரிடம் தெரிவித்திருப்பதாக அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்திருந்தார். அதுபோல் டாக்டர் ராமதாசும் ஊரடங்கு நேரத்தில் மக்கள் வெளியில் வரக்கூடாது என்று தொடர்ந்து எச்சரித்து வருகிறார். ட்விட்டர் வழியாக கருத்து சொன்னாலும், தைலாபுரத்திலிருந்து இருவரும் வெளியே வரவில்லை என்கின்ற கவலையும், வன்னிய சமூக மக்கள் அதிகமுள்ள வட மாவட்டங்களில் கூட நிவாரண உதவிகளை வழங்க பா.ம.க. முன்வரவில்லை என்கின்ற வருத்தமும், தங்களைக் கூட பெரியய்யாவும் சின்னய்யாவும் விசாரிக்கவில்லை என்கின்ற ஆதங்கமும் பா.ம.க. நிர்வாகிகளிடம் இருக்கிறது. தைலாபுரத் தரப்போ, டாக்டர்களான இருவரும் கரோனாவின் டேஞ்சரசை உணர்ந்ததால்தான் அவங்க ரெண்டுபேரும் தங்கள் பாதுகாப்பைக் கருதி வெளியே வரவில்லை என்று கூறுகின்றனர். அதோடு, பூரண மதுவிலக்கையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது பா.ம.க.