Skip to main content

பாமக உதவியுடன் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்...

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றிய குழு தலைவர் தேர்தல் கடந்த 10 ஆம் தேதி நடைபெற இருந்தது. அப்போது அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. மறு தேர்தல்  30ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற்றது. மொத்தம் 22 கவுன்சிலர்களை கொண்ட ஒன்றிய குழு தேர்தலில் திமுக உள்பட 16 கவுன்சிலர் ஆதரவுடன் திமுகவை சேர்ந்த உஷாராணி குமரேசன் வெற்றி பெற்றுள்ளார்.

 

Krishnagiri




மொத்தமுள்ள 22 கவுன்சிலர்களில் திமுக 8, அதிமுக 6, பாமக 3, சிபிஎம் 1, சுயேட்சை 4 என இருந்த நிலையில் 12ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற இருந்தது. திமுக சேர்மேன் வேட்பாளர் உஷாராணி குமரேசனுக்கு ஆதரவாக பாமகவைச் சேர்ந்த 3 பேரும், சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு பேர் என வாக்களிக்க இருந்தனர். 
 

அப்போது தனது கூட்டணி கட்சியான பாமக, திமுகவுக்கு ஆதரவு அளிப்பது தெரிந்ததும், அதிமுகவினர் தங்கள் ஆதரவில் உள்ள 9 கவுன்சிலர்களுடன் உள்ளே வந்து தேர்தல் அதிகாரியிடம் இருந்த தேர்தல் ஆவணங்களை கிழித்து வீசினர். தேர்தல் நடத்த கூடாது என்று பிரச்சனை செய்தனர்.
 

இதனால் தேர்தல் நடத்த கால தாமதம் ஆனது. பிறகு அதிமுக நிர்வாகிகள் சிலர் தேர்தல் அலுவலகத்தில் உள்ளே இருப்பதாக கூறி அவர்களை வெளியேற்ற சொல்லி திமுக வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு சமரசம் செய்யப்பட்டது. நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் தேர்தலை நடத்தாத காரணத்தால் உடனே தேர்தலை நடத்த கோரி திமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் முன்னாள் எம்பி சுகவனம், சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


 

 

பிறகு ஊத்தங்கரை தேர்தல் அதிகாரி கூறுகையில், ஆவணங்களை அதிமுகவினர் சிலர் கிழித்ததாகவும் சட்ட ஒழுங்கு பிரச்சினை உள்ளதாகவும் கூறி மறு தேதி அறிவிக்காமல் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார்.
 

பாமகவைச் சேர்ந்த ராஜசேகர் தனக்கு துணை சேர்மேன் பதவி கேட்டதற்கு, அதிமுகவினர் அதற்கு மறுத்துள்ளனர். இதனால்தான் பாமக கவுன்சிலர்கள் திமுகவுக்கு மறைமுக தேர்தலில் ஆதரவு அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.