Skip to main content

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய தி.மு.க. சேர்மேன் கணவர்: கட்சித் தலைவரிடம் புகார் அளிக்க முடிவு...

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

 

பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் ஊழியரை சரமாரியாக தாக்கிய சேர்மன் கணவர் மீது நடவடிக்கை எடுக்காமல் வீடியோ ஆதாரம் கொடுத்தும் ஊழியர் மீதே வழக்குபதிவு செய்து கைது செய்தது கவலையளிக்கிறது என்கிறார்கள் ஊழியர்கள் பலரும்.
 

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கூத்தூரில் இயங்கிவரும் பெட்ரோல் பங்கில் கூகூர் கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டியன் என்கிற இளைஞர் வேலை பார்த்து வருகிறார். பரபரப்பாகவே இருக்கும் அந்த பெட்ரோல் பங்கிற்கு கீழ்வேளூர் திமுக சேர்மன் வாசுகியும், அவரது கணவரும் திமுக ஒன்றிய துனை செயலாளருமான நாகராஜனும் காரில் வந்து 300 ரூபாய் கொடுத்து டீசல் போட சொன்னார்கள். ஊழியர், டீசல் போட்டுக்கொண்டிருக்கும் போது டீசல் பம்ப் நின்றதால் நாகராஜனுக்கும் ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 


 

இந்த நிலையில் பேசிக்கொண்டிருக்கும்போதே நாகராஜன் டீசல் போட்டுக்கொண்டிருந்த ஊழியர் ராஜபாண்டியனை தாக்குகியுள்ளார். ஊழியரும் நாகராஜனை திருப்பி தாக்க பிரச்சனை பெரிதானது. இந்த விஷயம் அறிந்து அங்கு விரைந்து வந்த சேர்மன் கணவரின் ஆதரவாளர்கள் பெட்ரோல் பங்கில் இருந்த ராஜபாண்டியனையும் அங்குள்ள அறைகளையும் அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.
 

 ராஜபாண்டியன் டீசல் போடும்போது நாகராஜன் சண்டைக்கு இழுப்பதும், ஊழியரை தாக்கியதும் அறைகளில் புகுந்து ரகளை செய்வதும் அங்குள்ள கேமாராவில் பதிவாகி, அந்த வீடியோ காட்சிகளில் வைரலாகிவருகிறது. இந்த விவகாரம் பிரியாணிக்கடை விவகாரம்போல மாறிவிடுமோ என்கிற அச்சத்தில் ஒ.து.செ. நாகராஜன் மருத்துவமனையில் அட்மிட் ஆகி,  அங்கிருந்தபடியே புகாரை கொடுத்து கீழ்வேளூர் போலிஸார் மூலம் வழக்குப்போட வைத்து அடி வாங்கிய ஊழியரையே கைது செய்ய வைத்துள்ளார். இந்த விவகாரத்தை நாகை மாவட்ட பெட்ரோல் பங்க் சங்கத்தினர் மற்றும் ஊழியர்கள் சும்மாவிடுவதாக இல்லை என திமுக தலைவரிடம் புகார் அளிக்க தயாராகிவருகின்றனர்.


 

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரிடம் விசாரித்தோம், "நாகராஜன் எப்போதுமே கோபம் அடையக்கூடியவர். உள்ளாட்சித்தேர்தலில் ரகளையில் ஈடுபட்டார் என அவர் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. சாதாரன ஊழியர் பங்கில் உள்ள பெட்ரோல் டீப் பழுதானதற்கு அவர் என்ன செய்வார். அதற்கு சமுதாயத்தில் அனைவராலும் மதிக்கக்கூடிய இடத்தில் கட்சி பொறுப்பில் இருக்கும் ஒருவர், பொருப்பாக நடந்துகொள்ளாமல் முதலில் கை நீட்டுகிறார். இவர் யார் என தெரியாமல் அந்த இளைஞர் திருப்பி அடிக்கிறான். இதற்காக ஆதரவாளர்களை வரவழைத்து அந்த இளைஞரை தாக்கியதோடு இல்லாமல் வழக்குபோட வைத்து கைது செய்ய வைத்திருப்பது வேதனையானது. நாகை மாவட்ட காவல்துறை ஆய்வாளர் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்கிறார்கள்.
 

சேர்மன் தரப்பினரோ, "பேசிக்கொண்டிருக்கும்போதே தவறான வார்த்தைகளைகூறி திட்டினான். அதனால் அறைந்தார். அதற்கு அவனும் அங்குள்ளவர்களும் தாக்கியது தர்மமா?" என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.