Advertisment

தி.மு.க. பிரமுகர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை அண்ணாநகர் தி.மு.க. பகுதி செயலாளராக இருப்பவர் பரமசிவம். இவரது வீடு டி.பி.சத்திரம் தர்மராஜா கோவில் தெருவில் உள்ளது. இந்த நிலையில் பரமசிவத்தின் வீட்டுக்கு வந்த மர்ம கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பரமசிவத்தின் கார் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இன்று காலை 6 மணியளவில் நடந்த இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் டி.பி.சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வீட்டு முன்பு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெட்ரோல் குண்டுகளை வீசியது யார்? என்பது தெரியவில்லை. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

annanagar Chennai house member bomb petrol
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe