Skip to main content

அதிமுக பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

Published on 20/06/2022 | Edited on 20/06/2022

 

Petition in the Chennai High Court seeking protection for the AIADMK General Committee

 

அதிமுக பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடவுள்ள நிலையில், அதிமுகவினர் மத்தியில் ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்துவருகிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வரும் நிலையில், பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

அதிமுக முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பெஞ்சமின் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவானது வரும் 22ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்