Advertisment

தந்தை பெரியாரின் 141வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள பெரியார் சிலைகளுக்கு பொதுமக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்திவருகின்றனர். சென்னை, அண்ணாசாலையின் சிம்சன் சந்திப்பில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரியார் உருவப்படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து அமைச்சர்கள் பலரும் வரிசையாக வந்து பெரியார் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

Advertisment