இது பற்றி எடப்பாடியிடம் அ.தி.மு.க. புள்ளிகள் பேசியதோடு, தங்கள் கூட்டணிக் கட்சிகளை, குறிப்பா தே.மு.தி.க.வை பிரச்சாரத்தில் இறக்கணும்னு கேட்டிருக்காங்க. இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. தலைமை விஜயகாந்த் மைத்துனர் சுதீஷைத் தொடர்பு கொண்டிருக்கு. அவர் பிரேமலதாவிடம் பேச, கேப்டனை பக்கத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியிருக்கே. சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைச்சிக்கிட்டுப் போயாகணுமேன்னு தயங்கிருக்காரு.
அதைப் பார்த்த விஜயகாந்த், கூட்டணி தர்மப்படி அந்த நான்கு தொகுதிகளுக்கும் போய் பிரச்சாரம் செய்வதுதான் சரி. நான் நல்லாதான் இருக்கேன். நீ போய் பிரச்சாரம் பண்ணுன்னு பிரேமலதாவுக்கு உத்தரவு போட்டாராம். அதனால், தொகுதிக்கு ஒரு நாள் வீதம், மே 13-லிருந்து 4 நாட்கள், தனது அதிரடி பாணித் தேர்தல் பிரச்சாரத்துக்குக் கிளம்ப இருப்பதாக செய்திகள் வருகின்றன.அதிமுகவில் மக்களை கவரும் வகையில் பிரச்சாரம் செய்ய தலைவர்கள் இல்லாதது பெரும் பின்னடைவாக இந்த தேர்தலில் பார்க்கப்படுகிறது.