Skip to main content

“பா.ஜ.க ஆட்சியை அகற்ற இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு மக்கள் தயாராகி விட்டார்கள்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
People are ready for second freedom struggle to remove the BJP regime says Minister I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி  சார்பாக போட்டியிடும் சி.பி.எம்.கட்சி வேட்பாளர் தோழர் சச்சிதானந்தத்தை  ஆதரித்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான சிலுவத்தூர் எஸ்.எம்.பி. பள்ளி, குமரன் திருநகர், அண்ணா நகர், விவேகானந்தன் நகர், காட்டாஸ்பத்திரி,  பஸ்ஸ்டாண்டு, கிழக்கு ஆரோக்கியமாதா தெரு, மெங்கில்ஸ்ரோடு. பெல்பர்க்  ரோடு, என்.வி.ஜி. தியேட்டர் நாகல்நகர் உட்பட 14 இடங்களில் தேர்தல் பிரச்சாரம்  நடைபெற்றது.

அப்போது ஒய்எம்ஆர்பட்டியில் உள்ள முருகன் கோவிலில்  அமைச்சர் ஐ.பெரியசாமி உடன் வேட்பாளர் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது அங்குள்ள கோவில் பூசாரி அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கும் பரிவட்டம் காட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதை தொடர்ந்து அதன் அருகே  உள்ள டீக்கடைக்கு சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமி பிட் நோட்டீசுகளை அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கொடுத்துவிட்டு டீக்கடைக்குள் வேட்பாளர் சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், மேயர்  இளமதியுடன் உட்கார்ந்து டீ குடித்துவிட்டு அங்குள்ளவர்களிடம் அரிவாள்  சுத்தியலுக்கு வாக்கு சேகரித்துவிட்டு சென்றார்.

People are ready for second freedom struggle to remove the BJP regime says Minister I. Periyasamy

இந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு அமைச்சர்  ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார். பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு  மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் தோழர்பாலபாரதி, தோழர் பாண்டி, திண்டுக்கல் மேயர்  இளமதிஜோதி பிரகாஷ், துணை மேயர் இராஜப்பா, ஒன்றிய செயலாளர்  நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் கிழக்கு பகுதி  செயலாளர் ராஜேந்திரகுமார் வரவேற்று பேசினார்.

இந்த பிரச்சாரத்தின் போது  பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “இந்தியா  முழுவதும் மக்கள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.கட்சியை அகற்ற 2ஆவது சுதந்திர  போராட்டத்திற்கு தயாராகி விட்டார்கள். அதற்கு காரணம் ஜி.எஸ்.டி.  வங்கிகளில் பண பரிமாற்றம் செய்தால் அதற்கு கமிஷன், அன்றாடம்  பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களுக்;கு கூட அதிகவரி, உள்ளிட்ட பல காரணங்களால் மோடி தலைமையிலான பா.ஜ.க. கட்சியை விரட்ட தயாராகிவிட்டார்கள். திராவிட மாடல் ஆட்சிநாயகன் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் திண்டுக்கல் மாநகருக்கு எண்ணற்ற நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

People are ready for second freedom struggle to remove the BJP regime says Minister I. Periyasamy

குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ரூ.550 கோடியில் திண்டுக்கல் மாநகர மக்களின் குடிதண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர  தீர்வு காணும் வண்ணம் வைகை அணையில் இருந்து குழாய்கள் மூலம் குடி  தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது. திண்டுக்கல் மாநகருக்கு பேரணை, ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம், காவிரி கூட்டுக்குடிநீர் தற்போது வைகையில்  இருந்து கூட்டுக்குடிநீர்; கொண்டுவரப்பட உள்ளது. திமுக ஆட்சியின் போது தான்  திண்டுக்கல்லுக்கு மேம்பாலங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல  வேண்டும் என்றால் நாகல்நகர் ரயில்வே நிலைய மேம்பாலம், திருச்சி சாலை மேம்பாலம், கட்டிக்கொடுக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமமின்றி செல்லும் நிலைமை உருவானது. இது போல நாகல்நகர் பகுதியில் வசிக்கும் கைத்தறி நெசவாளர்களான சௌராஷ்டிரா மக்களின் நலன் கருதி பாரம்பரிய கோவிலினை காப்பாற்றி கொடுத்ததோடு கைத்தறி நெசவாளர்களுக்கும்  இலவச மின்சாரம் தந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக அரசு கைத்தறி நெசவாளர்களை காக்க  தவறிவிட்டது. தற்போது தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடத்தும் தமிழக  முதல்வர் முக ஸ்டாலின்  கைத்தறி நெசவாளர்களை காப்பாற்ற  திண்டுக்கல்லை சுற்றி நெசவுபூங்கா அமைப்பதுடன் அவர்களுக்கான  கூலியையும் உயர்த்தி கொடுத்துள்ளார் என்றார். பாராளுமன்ற தேர்தலுக்கு  பிறகு திண்டுக்கல் மாநகர மக்களின் நலன் கருதி திண்டுக்கல்லில் இருந்து  சென்னைக்கு தனி ரயில் வசதி செய்து கொடுக்கப்படும். அந்த ரயில் திண்டுகல்லில் இருந்து புறப்படும். இதுபோல ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு விமான நிலையம் அமைய திமுக தலைமையிலான கூட்டணி உறுதியாக இருக்கும் என்றார். இங்கு சி.பி.எம். கட்சி சார்பாக பாராளுமன்ற தேர்தலில்  போட்டியிடும் வெற்றி வேட்பாளர் சச்சிதானந்தம் 24 மணிநேரமும்  மக்களுக்கான பணியாற்றக் கூடியவர் மண்ணின் மைந்தர் அவருக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள்  வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.