Skip to main content

உடல் மெலிந்த சிதம்பரம்... ஆதாரம் இல்லாத சிபிஐ... விரைவில் வெளிவருவார் சிதம்பரம்!

Published on 25/10/2019 | Edited on 25/10/2019

ஐ.என்.எக்ஸ். நிறுவன முறைகேடு விவகாரத்தில் திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தின் நிலைமை மிக மோசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ. தொடுத்த ஐ.என்.எக்ஸ் வழக்கு வீக்கான வழக்கு தான் என்று சொல்லப்படுகிறது. அந்த நிறுவனத்தின் உரிமையாளரான இந்திராணி முகர்ஜியை ப.சிதம்பரம் சந்தித்தார் என்பதற்கான ஆதாரத்தை கூட சி.பி.ஐ.யால் காட்ட முடியவில்லை என்று கூறுகின்றனர். அப்படிப்பட்ட வழக்கில் இத்தனை நாள் ப.சிதம்பரத்தை தங்கள் சாமர்த்தியத்தால் சிறையில் வைத்து, அவரது எடையில் 5 கிலோவைக் குறைத்திருக்கிறது சி.பி.ஐ. அடுத்து ப.சி.க்கு எதிராக களமிறங்கியிருக்கும் அமலாக்கத்துறை வசம் நிறைய புதிய ஆதாரங்கள் இருக்கு என்று கூறிவருகின்றனர். 

 

congress



குறிப்பாக ப.சி. தரப்பு சிங்கப்பூர், மலேசியா, யு.கே. உள்ளிட்ட நாடுகளில் பழனியப்பன் உள்ளிட்ட உறவினர்கள் பலரின் பெயர்களில் சொத்துக்களை வாங்கிப் போட்டதாக கூறுகின்றனர். இதற்கான பண டிரான்சாக்ஷன் எல்லாமே எளிதில் சிக்கிக்கொள்ளும் வகையில் சாமர்த்தியம் இல்லாமல் நடத்தப்பட்டது என்று கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல் ப.சிதம்பரத்தின் ஆடிட்டர்கள் இருவரை அப்ரூவர் செய்து தங்கள் கைவசம் அமலாக்கத்துறை வைத்துள்ளதாக கூறுகின்றனர்.  மேலும் ப.சி.மீதான இந்த வழக்கை கையாளும் அமலாக்கத்துறை இயக்குநர் ஜான் தாமஸ் ஏற்கனவே சென்னை அமலாக்கத்துறையில் இயக்குநராக இருந்தவர். அவர் தான் ஜெ.வின் சொத்துக்குவிப்பு வழக்கிலும், சசிகலா, தினகரன் மீதான வழக்குகளிலும் கவனமாகச் செயல்பட்டு, தண்டனைகளைப் பெற்று கொடுத்தவர் என்று சொல்லப்படுகிறது. 


அதனால் அவரின் நடவடிக்கைகளை சிதம்பரம் தரப்பு கவனமாக கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது. இன்னும் எத்தனை காலம் சிறைவாசம் என்பது சிதம்பர ரகசியமாகவே இருக்கும் நிலையில்... இந்த தீபாவளியை சிறையிலேயே கொண்டாடும் நிலையில் இருக்கார் ப.சி. ஆனால் அவரது தரப்பினரோ, எல்லாமே புனையப்பட்ட வழக்குகள் தான். சரியான ஆதாரங்கள் அவர்களிடம் இல்லை. இது அவர்களுக்கே தெரியும். இருந்தும் அரசியல் பழிவாங்கலுக்காகவே அவரைத் தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்க நினைக்கிறார்கள். அவர்கள் எண்ணம் நிறைவேறாது என்று காங்கிரஸ் தரப்பு கூறிவருகின்றனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.