ப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்!

2007- ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் கடந்த புதன்கிழமை இரவு ப.சிதம்பரம் சிபிஐ யினால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை 5 நாட்கள் (ஆகஸ்ட்- 26 வரை) நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். இந்த நிலையில் ப.சிதம்பரம் மீதான மற்றொரு வழக்கான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீனை நீட்டிக்கக்கோரிய மனு மீது வரும் செப்டம்பர் 3ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

congress

இந்த நிலையில் சிதம்பரம் மீது பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரித்தும், எதிர்ப்பும் தெரிவித்தும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக தமிழக கட்சிகள் சிதம்பரம் விவகாரத்தை பெரிதாக எடுக்கவில்லை என்றும், சொந்த கட்சியினரே கண்டுகொள்ளவில்லை என்றும் தமிழக மக்களுக்கும் சிதம்பரம் மீது கோபத்தில் இருப்பது போன்று கூறப்பட்டது. இது குறித்து விசாரித்த போது, சிதம்பரம் மீது இந்த கோபம் இல்லை அவர் மனைவி நளினி மீது மக்களுக்கு இருக்கும் கோபத்தை தான் சிதம்பரம் மீது தமிழக மக்கள் காட்டுகின்றனர் என்றனர்.

ஏனென்றால் தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடினார். அதே போல் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா அமைப்புக்காக ஆஜரானார் நளினி சிதம்பரம். இதுமட்டுமில்லாமல் ஸ்டெர்லைட், சாரதா சிட்பண்ட் ஆகிய நிறுவனத்துக்காகவும் வாதாடினார். இந்த காரணத்திற்காக தான் தமிழக மக்கள் கோபமாக இருப்பதாக சொல்கின்றனர். இருந்தாலும் சிதம்பரம் மத்திய அமைச்சராக இருக்கும் போது சிதம்பரம் செய்த பொருளாதார நடவடிக்கைகளை பாராட்டி வருகின்றனர்.

amithsha congress family p.chidambaram
இதையும் படியுங்கள்
Subscribe